கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று நாகர்கோவில் மாநகரில் மட்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து நூறு கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். தொடர்ந்து இது போன்ற சோதனைகள் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.