கொல்லங்கோடு:  செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

0
63

கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியில் செம்மண் அள்ளி டெம்போக்களில் கடத்தி செல்வதாக கொல்லங்கோடு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது மண் கடத்தியவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதை அடுத்து போலீசார் ஜேசிபி இயந்திரம் மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து வாகனங்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here