விக்கிரவாண்டிக்காக பொன்முடிக்கு வெள்ளைக் கொடி வீசும் அன்னியூர் சிவா!

0
27

எருதுக்கு நோவாம் காக்கைக்கு கொண்டாட்டமாம் என்று ஒரு சொலவடை சொல்வார்கள். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக-வில் இப்போது நடக்கும் விஷயங்கள் அப்படித்தான் இருக்கிறது.

ஒரு காலத்​தில் ஒன்​று​பட்ட விழுப்​புரம் மாவட்ட திமுக-வுக்கே செய​லா​ள​ராக இருந்த முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி இப்​போது எந்​தப் பதவி​யும் இல்​லாமல் இருக்​கி​றார். விழுப்​புரம் தெற்கு மாவட்​டத்​துக்கு இவரது மகனும் எம்​பி-​யு​மான கவுதமசி​காமணி செய​லா​ள​ராக இருக்​கி​றார். பொன்​முடி விழுப்​புரம் மாவட்ட திமுக-​வின் அசைக்க முடி​யாத அதி​கார மைய​மாக இருந்​த​போது, அவரை எதிர்த்து அரசி​யல் செய்​தவர் அன்​னியூர் சிவா. துரை​முரு​கன், கே.என்​.நேரு, ஜெகத்​ரட்​சகன் ஆகி​யோ​ருடன் தனக்​கிருக்​கும் நெருக்​கத்​தைப் வைத்​துக்​கொண்டு பொன்​முடியை தாண்டி தனி ஆவர்த்​தனம் செய்​து​வந்​தார் சிவா.

இந்த நிலை​யில், 2021-ல் விக்​கிர​வாண்டி தொகு​தி​யில் போட்​டி​யிட சீட் கேட்​டார் சிவா. ஆனால் அதை லாகவக​மாக தட்​டி​விட்ட பொன்​முடி, தனது விசு​வாசி​யான புகழேந்​திக்கு விக்​கிர​வாண்​டியை வாங்​கிக் கொடுத்து ஜெயிக்க வைத்​தார். உடல் நலக் குறை​வால் புகழேந்தி கால​மான​தால் கடந்த ஆண்டு நடை​பெற்ற விக்​கிர​வாண்டி இடைத் தேர்​தலில் தனது இன்​னொரு விசு​வாசி​யான மாவட்ட பஞ்​சா​யத்து தலை​வர் ஜெயச்​சந்​திரனை நிறுத்த முயன்​றார் பொன்​முடி. ஆனால், துரை​முரு​கன், ஜெகத், நேரு கூட்​டணி மூலம் தனக்கு அந்த வாய்ப்​பைப் பெற்​றார் அன்​னியூர் சிவா. அந்த நேரத்​தில் தான் கவுதமசி​காமணிக்கு தெற்கு மாவட்​டச் செய​லா​ளர் பொறுப்பை தலைமை வழங்​கியது என்​ப​தால் சிவாவை ஜெயிக்க வைத்தே ஆகவேண்​டிய கட்​டா​யம் பொன்​முடி தரப்​புக்கு ஏற்​பட்​டது.

இருந்த போதும் சிவா சீட் வாங்​கிய விஷ​யத்தை இன்​னும் மறக்​காமல் இருக்​கும் பொன்​முடி, 2026 தேர்​தலில் விக்​கிர​வாண்டி தொகு​திக்கு மீண்​டும் ஜெயச்​சந்​திரனை முன்​னிறுத்த முயற்​சிப்​ப​தாகச் சொல்​லப்​படு​கிறது. இந்​தத் தகவல் பொது​வெளிக்கு வந்​து​விட்​ட​தாலோ என்​ன​வோ, புலம்ப ஆரம்​பித்​திருக்​கி​றார் சிவா. அண்​மை​யில் நடை​பெற்ற விழுப்​பும் தெற்கு மாவட்ட திமுக செயற்​குழு கூட்​டத்​தில் பொன்​முடியை​யும் மேடை​யில் வைத்​துக் கொண்டு அனைத்​தை​யும் கொட்​டித் தீர்த்​து​ விட்​டார் சிவா.

அந்​தக் கூட்​டத்​தில், “நான் எவ்​வளவு காலம் அமைச்​சருடன் (பொன்​முடி) இருந்​தேன்​… எவ்​வளவு தூரம் தள்ளி இருந்​தேன் என எல்​லோருக்​கும் தெரி​யும். விழுப்​புரம் மாவட்​டத்​தில் 1993-ல் கட்சி மிகப்​பெரிய சரிவை சந்​தித்​தது. அன்​றைககு அமைச்​சரின் காரை ஓட்​டிச் சென்​றவன் நான். இடை​யில் பலரும் என்​னென்​னவோ அரசி​யல் செய்​தனர். கூட இருப்​பவர்​கள் சொல்​வதைத் தான் அமைச்​சர் கேட்​பார். அதனுடைய விளைவு​தான் இது. இனிமேல் கேட்​க​மாட்​டார் என நினைக்​கிறேன்.

சாதி இல்லை என்று சொல்​வதெல்​லாம் சும்​மா. நம்ம சாதிக்​காரன் மேலே வந்​து​விடக்​கூ​டாது என நினைப்​பவன் நிறைய பேர் இருக்​கி​றான். அமைச்​சர் என்​னைக் கொஞ்ச காலம் தள்ளி வைத்​திருந்​தார். அப்​போது​கூட அவரை எங்க ஊர் அமைச்​சர் என்று தான் சொல்லி இருப்​பேனே தவிர அவரது பெயரைச் சொன்​ன​தில்​லை. எல்லா நிகழ்ச்​சி​யிலும் அவருக்கு வணக்​கம் வைத்​து​விட்​டுத்​தான் செல்​வேன். இப்​போது நான் எம்​எல்ஏ ஆகி​யிருக்​கிறேன் என்​றால், அதற்கு அவரது (பொன்​முடி) உழைப்​பு​தான் காரணம்.

2006-ல் நான் கட்​சியை விட்டு போய்​விடு​வேன் என எல்​லோரும் சொன்​னார்​கள். என்​னிடம் அமைச்​சர் பேசி​னார். நான் கட்​சியை விட்​டுப் போக​மாட்​டேன் எனக் கூறினேன். அப்​போது நான் பொதுக் குழு உறுப்​பினர். அந்​தப் பதவியை கொடுத்​ததும் அமைச்​சர் தான். பல விஷ​யங்​களை அமைச்​சர் மறந்​து​விட்​டார். அவரை நினைக்​கவே விடா​மல் என்னை போட்​டுக் கொடுத்​துக் கொண்டே இருந்​தார்​கள்.

விக்​கிர​வாண்​டி​யில் 2026-ல் யார் நின்​றாலும் உதயசூரிய​னுக்கு நான் ஓட்​டுக் கேட்​பேன். என்னை பற்றி அமைச்​சருக்கு தெரி​யும். எனக்​கும் அவருக்​கும் இடை​யில் பெரிய இடைவெளி இருப்​பது போன்ற தோற்​றத்தை நிர்​வாகி​கள் ஏற்​படுத்தி வரு​கின்​ற​னர். எங்​களுக்​குள் எது​வும் இல்​லை” என்று சொன்ன சிவா தொடர்ந்​து, “கவுதமசி​காமணி சட்​டமன்ற உறுப்​பின​ராகி…” என ஆரம்​பிக்க, குறுக்​கிட்ட பொன்​முடி, “அதெல்​லாம் வேண்​டாம்” என தடுத்​தார். ஆனாலும், “நான் தப்பா எது​வும் சொல்​ல​வில்​லை. கவுதமசி​காமணி எந்த இடத்​துக்கு வந்​தா​லும், முதல் ஆளாக வாழ்க எனச் சொல்ல நான் தயா​ராக இருக்​கிறேன்” என்று சொல்லி முடித்​தார் சிவா.

சிவா​வின் புலம்​பல் குறித்து நம்​மிடம் பேசிய பொன்​முடி ஆதர​வாளர்​கள் சிலர், “விக்​கிர​வாண்டி தொகு​தியை தக்​க​வைத்​துக் கொள்ள சிவா வெள்​ளைக் கொடி வீசுகி​றார். திருக்​கோ​விலூர் தொகு​தி​யில் பொன்​முடியோ அவரது மகன் கவுதமசி​காமணியோ களமிறங்​கலாம் என்ற பேச்சு உள்​ளது. இதைத் தெரிந்து கொண்டு தான் ‘கவுதமசி​காமணி சட்​டமன்ற உறுப்​பின​ராகி’ என சிவா பேச்சை எடுத்​திருக்​கி​றார். ஒரு​வேளை, கவுதமசி​காமணிக்கு வாய்ப்​பளித்​தால் தனக்கு விக்​கிர​வாண்​டி​யில் சீட் கிடைக்க தடங்​கல் செய்​யக் கூடாது என்​ப​தற்​காகவே பொன்​முடிக்கு பழசை எல்​லாம் நினை​வூட்டி புத்தி சொல்ல ஆரம்​பித்​திருக்​கிறார் சிவா” என்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here