அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக நாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு

0
20

அ​சாம் மாநில முதல்​வ​ராக 2-வது முறை​யாக ஹிமந்த பிஸ்வா சர்மா நாளை பதவி​யேற்க உள்​ளார்.

அசாம் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் (என்​டிஏ) கூட்​ட​ணி, மொத்​தம் உள்ள 126-ல் 102 இடங்​களில் அமோக வெற்றி பெற்​றது. இதன் மூலம் இக்​கூட்​டணி தொடர்ந்து 3-வது முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்​தது. இந்​நிலை​யில், குவாஹாட்​டி​யில் என்​டிஏ எம்​எல்​ஏ-க்​கள் கூட்​டம் நேற்று நடைபெற்றது.

இதில் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இதையடுத்​து, ஆளுநர் லட்​சுமண் பிரசாத் ஆச்​சார்​யாவை சந்​தித்த ஹிமந்த பிஸ்வா சர்​மா, ஆட்சி அமைக்க உரிமை கோரி​னார். இதை ஏற்​றுக் கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்​கு​மாறு அழைப்பு விடுத்​தார்.

இதன் மூலம் சர்மா 2-வது முறை​யாக முதல்​வ​ராக நாளை பதவியேற்க உள்​ளார். என்​டிஏ எம்​எல்​ஏ-க்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்ற மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்​டா, ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பெயரை 8 பாஜக எம்​.எல்​.ஏ-க்​கள் முன்​மொழிந்​த​தாகத் தெரி​வித்​தார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பாஜக மற்​றும் என்​டிஏ சட்​டப்​பேர​வைக் கட்​சித் தலை​வ​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள ஹிமந்த பிஸ்வா சர்​மாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகள். வளர்ச்​சி, ஸ்திரத்​தன்மை மற்​றும் பொது நலனுக்​காக அசாம் மக்​கள் மூன்​றாவது முறை​யாகத் தொடர்ந்து ஆசி வழங்​கி​யுள்​ளனர். பிரதமர் நரேந்​திர மோடி​யின் தலைமையில், இந்த ‘இரட்டை எஞ்​சின்’ அரசு ‘வளர்ச்​சி​யடைந்த அசாம்’ மற்​றும் ‘வளர்ச்​சி​யடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய முக்​கியப் பங்​காற்​றும். இவ்​வாறு அதில்​ கூறியுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here