திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு அருகே உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இன்று விஷூக்கணி காணும் நிகழ்வும், கைநீட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. ஆஞ்சநேய சித்தர் தலைமையில் கல்வியாளர் பிருந்தா ஸ்ரீகுமார் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு பழங்கள், காய்கறிகள், மலர்கள் படைக்கப்பட்டு விஷூக்கணி காணப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.














