இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த சுனில் குமார் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக அருமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று போலீசார் சென்றபோது, சுனில் குமார் தப்பி ஓடி தலைமறைவானார். போலீசார் அவரது வீட்டில் இருந்து ரூ. 43,400 மதிப்பிலான 280 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரைத் தேடி வருகின்றனர்.














