குலசேகரம்: யோகா விழிப்புணர்வு ; 100 நாட்கள் பயிற்சி முகாம்

0
118

வரும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் 100 நாட்கள் யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி சேர்மன் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி இந்த பயிற்சியை துவக்கி வைத்தார். இந்த 100 நாட்கள் பயிற்சி ஜூன் 21 வரை நடைபெறும் என்றும், இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் யோகாவின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here