கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும்: சீமான் கருத்து

0
23

கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார்.

விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பட்​டா​சால் ஏற்​படும் காற்று மாசு​பாட்​டை​விட நிலக்​கரி, மீத்​தேன், ஹைட்ரோ கார்​பன் போன்​றவை​தான் அதிக மாசு ஏற்​படுத்​தும். பெரிய முதலா​ளி​களை விட்​டு​ விட்​டு, சிவ​காசி போன்ற சிறிய ஊரில் இருக்​கும் சிறு முதலா​ளி​களின் பட்​டாசு தொழிலுக்கு நெருக்​கடி கொடுக்​கின்​றனர்.

கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும். அனைத்​துக்​குமே காரணம் அரசு என்று கூறு​வதை ஏற்க முடி​யாது. பாஜக விஜய்க்கு ஆதர​வாக இருக்​கிறது என்​பது வெளிப்​படை​யாகத் தெரி​கிறது. பாஜக எம்​.பி.க்​கள் குழு இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு ஆறு​தல் கூறு​வதை​விட, திமுக அரசை குறை கூறு​வ​தில்​தான் மும்​முர​மாக உள்​ளனர்.

கரூர் சம்​பவத்​துக்கு முதல்​வர் பொறுப்​பேற்க வேண்​டும் என்று கூறு​வோர், மணிப்​பூர் கலவரத்​துக்கு யார் பொறுப்​பேற்க வேண்​டும் என கூற​வில்​லை. இதே நீதிபதி ஆணை​யத்​தில் தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு சம்​பவம் குறித்து 3 மணி நேரம் சாட்​சி​யம் அளித்​தேன்.

ஆனால், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு சம்பள உயர்​வுடன் பணி​யிட மாறு​தல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு சம்​பவத்​துக்கு உண்மை கண்​டறி​யும் குழு அமைக்​காத பாஜக, தற்​போது கரூர் சம்​பவத்​துக்கு மட்​டும் அமைப்​பது அரசி​யல்.

கள்​ளச் சாரா​யம் குடித்​து​விட்டு இறந்​தவர்​கள், நடிகரைப் பார்க்க வந்து இறந்​தவர்​களுக்கு தலா ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கும் தமிழக அரசு, மீனவர், ராணுவ வீரர் இறந்​தால் எத்​தனை லட்​சம் கொடுக்​கிறது? இவ்​வாறு சீமான் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here