குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ரெயில் மூலமாக கொண்டு வரப்படுவது வழக்கம். அந்தவகையில் தஞ்சாவூரில் இருந்து 2, 600 டன் ரேஷன் அரிசி நேற்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் இந்த அரிசி மூடைகள் வந்தன. பின்னர் அங்கிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு பள்ளிவிளை குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.














