Home 2024
Yearly Archives: 2024
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி கருத்து
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி மாற்றியிருப்பது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும்.
தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது...
கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்த விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ வால்பாறை ஸ்ரீதரன், பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, பாஜக வழக்கறிஞர்...
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் திமுக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது: இபிஎஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கள்ளக் குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், சிபிஐ விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் போராடிய முதன்மையான இயக்கம் அதிமுக. நமது தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக,...
அரசுப் பள்ளியில் ஆசிரியர் ரமணி கொலை: சட்ட நடவடிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
“தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது....
இரணியல்: வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை
இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் எதுவும் இல்லை. சமீபத்தில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இதற்காக தக்கலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை கட்டி முடிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். இதற்கிடையே வங்கியில் இருந்து வந்த ஊழியர்கள் பணம் கட்ட கூறி மணிகண்டனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவருத்தமடைந்த மணிகண்டன் நேற்று (18-ம் தேதி) மாலை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து,...
புதுக்கடை: கூலித்தொழிலாளி மனைவி மாயம்.. போலீசில் புகார்
புதுக்கடை அருகே மாடச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (68). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (62). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவ தினம் மாலை விஜயன் புதுக்கடைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டில் வந்து பார்த்தபோது, சரோஜாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் அவர் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சரோஜா கழுத்தில் தாலி உட்பட சுமார் 8 பவுன் நகைகள் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் நேற்று (19-ம் தேதி) வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்பெக்டர்...
தக்கலை: போலி செக் மோசடி 2 பேர் மீது வழக்கு
தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் ஜோசப் (57). இவர் மாலத்தீவில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்குச் சொந்தமாக 20 ஏக்கர் 10 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை அப்பட்டு விளைச் சேர்ந்த ரமேஷ் (47) என்பவர் தனது உறவினர் என கூறி, அதங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேமச்சந்திரன் மனைவி ஷாலினி (35) என்பவருக்கு விலைக்கு வாங்குவதாக மூன்று கோடி 25 லட்சம் விலை பேசப்பட்டு, முன்பணமாக 25 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதிப் பணமான 3 கோடிக்கு மூன்று காசோலைகள் கொடுத்து சொத்தை எழுதி...
புதுக்கடை: கோயில் கொள்ளை ; மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
புதுக்கடை அருகே உள்ள பார்த்திபுரம் பகுதியில் மிகவும் பழமையான பார்த்தசாரதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி குறித்து கருவறையில் இருந்த ஐம்பொன் சிலை மற்றும் பொருட்களை திருடி சென்றனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என்றும் கோவிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ள வேண்டும் என இந்து அறநிலையத்துறை,...
கருங்கல்: பேரூராட்சி பணியாளர்களை தாக்கிய மாஜி ராணுவவீரர் கைது
கருங்கல் அருகே கப்பியறை பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று காலை இடைமலை கோணம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தோமஸ் (44) என்பவர் வந்திருந்தார். அவர் பேரூராட்சி செயலாளர்களைப் பார்க்க வேண்டும் என்று கூறினார். பணியாளர்கள் செயல் அலுவலர் சிறிது கழித்து வருவதாகக் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த தோமஸ் பேரூராட்சி தலைவர் மற்றும் செயலாளர்களை அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. ஊழியர்கள் கருங்கல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ராணுவ வீரர் வீட்டிற்குச் சென்று விசாரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தோமஸ் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள்...
வணங்கான் எனக்கு முக்கியமான படம்: அருண் விஜய் நெகிழ்ச்சி
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். தனது வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தை, தனது குடும்பத்தினருடன் அருண் விஜய் சமீபத்தில் பார்த்தார். கிளைமாக்ஸ் முடிந்ததும் அவருடைய குடும்பத்தினர் கண்கலங்கினர். அருண் விஜய் இதற்கு முன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்பதால், அவர்கள்...














