Home 2024
Yearly Archives: 2024
அரும்பாக்கம் விநாயகர் கோயில் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு நடவடிக்கை – மாநகராட்சி உறுதி
அரும்பாக்கம் ஜானகிராமன் காலனியில் குடியிருப்பு கட்டிடத்தை ஒட்டி சாலையில் பாலவிநாயகர் கோயில் நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில் அருகில் உள்ள வீடு ஒன்றில் விலங்குகள் நல ஆர்வலர், நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார். இந்த நாய்கள், அசைவ உணவை உண்டுவிட்டு, எலும்புகளை விநாயகர் கோயிலில் போட்டு அசுத்தம் செய்வதாக புகார் எழுந்தது.
எனவே, நாய்களுக்கு இப்பகுதியில் உணவளிப்பதை தவிர்க்குமாறு பக்தர்கள் சார்பில் விலங்குகள் நல ஆர்வலரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாயகர் கோயில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகவும், அதை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல...
விசிக நிர்வாக கட்டமைப்பு: திருமாவளவன் அறிவுரை
விசிக தலைவர் திருமாவளவன் முகநூலில் பேசியது: கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. ஒருங்கிணைப்புக் குழுவில் நியமிக்கப்பட்ட அனைவரும் கட்டாயம் களத்தில் இருக்க வேண்டும். அவர்கள் ஒரு சார்பு அணுகுமுறையை கடைபிடிக்கக்கூடாது.
மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, மாநில பொறுப்புகள், துணை நிலை அமைப்புகளின் பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற வேண்டும். பட்டியலினத்தவர் அல்லாதவர், பெண்கள், சிறுபான்மையினர், மாணவர்கள், இளைஞர்கள் தரப்பினர் விண்ணப்பிக்காமல் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து, மாவட்ட நிர்வாகிகளுக்கு தக்க அறிவுறுத்தல் வழங்க வேண்டும். பட்டியலினத்தவர் அல்லாதவர், சிறுபான்மையினர், பெண்களை கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் கொண்டுவர...
2026 சட்டப்பேரவை தேர்தல்: ஜனவரி முதல் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த தமிழக பாஜக திட்டம்
ஜனவரி மாதம் முதல் 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக...
கூடைப்பந்து வீராங்கனை எலினா இறப்புக்கு சிக்கன் ரைஸ் காரணமில்லை: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
கூடைப்பந்து வீராங்கனை எலினா இறப்புக்கு சிக்கன் ரைஸ் சாப்பிட்டது காரணமில்லை என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராபின் டென்னிஸ் என்பவரின் மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கச் சென்ற அவர், ரயிலில் சென்னை திரும்பிக் கொண்டிருக்கும்போது வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, 17-ம் தேதி காலை...
நவ.24-ல் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா: அதிமுகவினருக்கு பழனிசாமி அழைப்பு
அதிமுக சார்பில் நவ.24-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கட்சியினர் அனைவருக்கும் பொதுச்செயலாளர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களுக்கு அனைத்து வகைகளிலும் சேவை ஆற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எம்ஜிஆரால் `அதிமுக தோற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா தலைமையிலும், தொடர்ந்து நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களாகிய உங்கள் அனைவரின் நல்லாதரவோடும், எனது தலைமையில் அதிமுக மக்கள் பணிகளை தொய்வில்லாமல் ஆற்றி...
நீதிக்கட்சியின் வாரிசுகளாக உரிமைகளை மீட்க உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
நீதிக்கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் தொடர்ந்து உழைப்பை செலுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த நீதிக்கட்சி கடந்த 1916 நவம்பர் 20-ம் தேதி தொடங்கப்பட்டது. அக்கட்சி உருவான தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கி சமூக நீதி புரட்சி. இலவச கட்டாய கல்வி மற்றும் காலை உணவு திட்டத்தை முன்னோடியாக தொடங்கி கல்வி புரட்சி.
இந்து...
தமிழக குற்ற வழக்கு தொடர்வு துறை இயக்குநராக உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமனம்
தமிழக குற்ற வழக்கு தொடர்(வு)த்துறை இயக்குநராக உயர் நீதிமன்ற அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணராஜாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநராக பணியாற்றிய சித்ராதேவி விருப்ப ஓய்வில் சென்றார். அதையடுத்து அந்த இடத்தில் தற்காலிக பொறுப்பு இயக்குநராக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இப்பதவிக்கு நிரந்தர இயக்குநரை நியமிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு இப்பதவிக்கு விண்ணப்பித்த...
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பு: மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச விருது
புதுப்பிக்க எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. குறிப்பாக, நம்பகமான, திறமையான நகர்ப்புற போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதை நோக்கமாக கொண்டும் செயல்படுகிறது. புதுப்பிக்க எரிசக்தியை பெறும் வகையில், சூரியஒளி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பான, விரைவான பயணத்தை சிறப்பாக அளித்து வருகிறது.
இதற்கிடையே, சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல்...
பூம்புகார், லெமூரியா குறித்து கடல் அகழ்வாராய்ச்சி: விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்
பூம்புகார், லெமூரியா கண்டம் குறித்து கடல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் வலியுறுத்தினார். தமிழியக்கம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழியல் மற்றும் பண்பாட்டுப்புலம் சார்பில் சிந்து சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கை அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் தொடங்கிவைத்தார். இதில் தமிழியக்கம் அமைப்பின் நிறுவனரும், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது சிந்து...
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால், பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றும் ஒரே நாளில், புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த அனைத்து விமானங்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...














