பஹல்​காமில் தீவிரவாதிகளுக்கு 15 உள்ளூர் ஆதரவாளர்கள் உதவியது கண்டுபிடிப்பு

0
39

காஷ்மீரின் பஹல்​காமில் தாக்கு தல் நடத்திய தீவிர​வா​தி​களுக்கு உள்​ளூரில் உள்ள காஷ்மீர் ஆதர​வாளர்​கள் (காஷ்மீரி ஓவர்​கிர​வுண்ட் ஒர்க்​கர்ஸ் – ஓஜிடபிள்​யூ) உதவி செய்​துள்​ளதை புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள் கண்​டு​பிடித்​துள்​ளனர்.

தீவிர​வா​தி​கள் தங்​கு​வதற்கு இடம், உணவு போன்ற வசதி​களை செய்து கொடுப்​பவர்​களை ஓவர்​கிர​வுண்ட் ஒர்க்​கர்ஸ் என்று அழைக்​கின்​றனர். இதுகுறித்து புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள் நேற்று கூறிய​தாவது: பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களுக்கு உள்​ளூர் ஆதர​வாளர்​கள் 15 பேர் உதவியது எலக்ட்​ரானிக் கருவி​களை ஆய்வு செய்த போது தெரிய வந்​தது.

அவர்​களில் முக்​கிய குற்​ற​வாளி​களாக 5 பேர் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளனர். அவர்​களில் 3 பேரை பிடிபட்​டுள்​ளனர். மற்ற 2 பேரை தீவிர​மாக தேடி வரு​கிறோம். தாக்​குதல் நடந்த 22-ம் தேதி வரை அவர்​களு​டைய செல்​போன் உட்பட எலக்ட்​ரானிக் கருவி​கள் இயங்​கி​யுள்​ளன. அதன்​பிறகு அவை அணைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும் மற்ற 10 பேரிடம் என்​ஐஏ, காஷ்மீர் போலீஸ், புல​னாய்வு பிரிவு, ரா போன்ற அமைப்​பினர் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​கள் இன்​னும் பஹல்​காம் பகு​தி​யில் அடர்ந்த வனப்​பகு​தி​யில் பதுங்​கி​யிருக்​கலாம் என்று சந்​தேகிக்​கிறோம். எனவே, வனப்​பகு​தி​யில் தீவிர தேடு​தல் வேட்டை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதற்​கிடை​யில், தாக்​குதல் நடந்த கடந்த 6 நாட்​களில் 10 தீவிர​வா​தி​களின் வீடு​களை பாது​காப்​புப்​ படை​யினர்​ இடித்​து தரைமட்​ட​மாக்​கி உள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here