பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

0
25

பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலையை உயர்த்தியதை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலை உயர்வை கண்​டித்து விசிக மற்​றும் இடது​சா​ரி​கள் கட்​சிகள் நேற்று வள்​ளலார் நகர் பேருந்து நிலை​யம் அருகே கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதில், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் பழ.ஆசைத்​தம்​பி, விசிக பொதுச்​செய​லா​ளர் ரவிக்​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

போக்​கு​வரத்​து, அத்​தி​யா​வசிய பொருட்​கள் விலை உயர்​வுக்கு காரண​மான பெட்​ரோல், டீசல் விலை உயர்வை கைவிட வேண்​டும். உணவகங்​கள், சிறு தொழில்​கள் மூட காரண​மான வணிக சிலிண்​டர் விலை உயர்வை கைவிட வேண்​டும் என ஆர்ப்​பாட்​டத்​தில் வலி​யுறுத்​தினர்.

ஆர்ப்​பாட்​டத்​துக்கு பின்​னர், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் செய்​தி​யாளர்​களிடம் கூறுகையில், ‘‘5 நாட்​கள் முன் பெட்​ரோல், டீசல் விலை உயர்த்​தப்​பட்​டது.

நான்கு நாட்​களுக்கு பிறகு விலை மேலும் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே, வணிக சிலிண்​டர் விலை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இதுபோல் சென்று கொண்​டிருந்​தால் அடுத்த சில நாட்​களில் வீட்டு உபயோக சிலிண்​டர் விலை​யும் கடுமை​யாக உயர்த்​தப்​படும். வாழ முடி​யாத நெருக்​கடிக்கு மக்​களை பாஜக அரசு தள்ளி உள்​ளது.

பெட்​ரோல், டீசல், எரி​வாயு என்​பது அத்​தி​யா​வசி​ய​மான பொருள். இதை அனைத்து மக்​களுக்​கும் குறை​வான விலை​யிலும், தட்​டுப்​பாடு இல்​லாமல் கிடைக்​க​வும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்​றார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன் தனது உரையில், ‘‘பெட்​ரோல், டீசல் எரி​வாயு விலை உயர்​வுக்கு முழுக்க முழுக்க மத்​திய அரசும், பிரதமரும்தான் பொறுப்​பு. இந்த நெருக்​கடிக்கு மூல காரணம் அமெரிக்கா​வும், இஸ்​ரேலும்தான்.

நம் நட்பு நாடு ஈரான் தங்கு தடை இல்​லாமல் எரி​வாயு கொடுத்து கொண்​டிருந்​தார்​கள். அதன் அதிபரை கொன்று விட்​டார்​கள். செல்​வந்​தர்​கள் தான் தேசவளங்​களை கொள்ளை அடிக்​கிறார்​கள். பிரதமரின் அறி​வுரை வேண்​டு​கோள் எல்​லாம் அந்த பக்​கம்​ திரும்​ப வேண்​டும்​. உழைக்​கிற மக்​கள்​ பக்​கம்​ அல்​ல’’ என்​று கூறினர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here