தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு விஜய் அஞ்சலி

0
24

ராஜஸ்​தானில் கார் விபத்​தில் உயி​ரிழந்த பிரபல தயாரிப்​பாளர் ஆர்.பி.சவுத்​ரி​யின் உடல் சென்னை வந்​தது. அவருடைய இறு​திச் சடங்கு இன்று காலை நடக்​கிறது. சூப்​பர் குட் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறு​வனம் சார்​பில் தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்னடம், இந்​தி​யில் பல படங்​களைத் தயாரித்​தவர் ஆர்​.பி. சவுத்ரி. அவருடைய முழு பெயர் ரத்​தன் லால் பகத்​ராம் சவுத்​ரி.

இவர், தனது சொந்த ஊரான ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூருக்கு அவ்​வப்​போது சென்று வரு​வது வழக்​கம். சமீபத்​தில் அங்கு சென்ற அவர், செவ்​வாய்க்​கிழமை காரில் சென்​று​கொண்​டிருந்த போது எதிர்​பா​ராத ​வித​மாக விபத்து ஏற்​பட்​டது. அதில் சிக்​கிய அவரை அக்கம்​பக்​கத்​தினர் மீட்டு உடனடி​யாக மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு சென்​றனர்.

அவருக்கு உடலில் எந்த காய​மும் ஏற்படவில்​லை. விபத்து ஏற்பட்ட அதிர்ச்​சி​யில் திடீரென மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் அவர் உயிரிழந்ததாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். இதையடுத்து அவருடைய உடல் நேற்று சென்​னைக்​குக் கொண்டு வரப்​பட்டு பொது​மக்​கள் மற்​றும் திரை​யுல​கினர் அஞ்​சலிக்​காக மயிலாப்பூரில் உள்ள அவருடைய இல்​லத்​தில் வைக்​கப்​பட்​டது.

அங்கு அவர் உடலைக் கண்டு குடும்​பத்​தினர் கதறி அழுதனர். நடிகரும் தவெக தலை​வரு​மான விஜய், மலர் வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​தி​னார். நடிகர் ஜீவாவை கட்​டியணைத்து ஆறு​தல் கூறினார். பல்​வேறு நடிகர், நடிகைகள், இயக்​குநர்​கள் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு நேரில் அஞ்​சலி செலுத்​தினர். நடிகர்​கள் ரஜினி​ காந்த், கமல்​ஹாசன் உள்பட பலர் இரங்​கல் தெரிவித்துள்ளனர்.

தமிழில், 1990-களில் ஏராள​மான புதிய இயக்​குநர்​களை​யும் நடிகர், நடிகைகளை​யும் அறி​முகப்​படுத்​தி​ய​வர் ஆர்​.பி.சவுத்​ரி. விக்​ரமன் அறி​முக​மான ‘புது​ வசந்​தம்’, கே.எஸ்​.ரவி​கு​மார் அறி​முக​மான ‘புரியாத புதிர்’, சரத்​கு​மார் நடித்த ‘சேரன் பாண்​டியன்’, ‘நாட்டாமை’, ‘சூர்​ய​ வம்​சம்’, விஜய் நடித்த ‘பூவே உனக்​காக’, ‘லவ் டுடே’, ‘துள்​ளாத மனமும் துள்​ளும்’, ‘திருப்​பாச்​சி’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்​களைத் தயாரித்​துள்​ளார்.

இப்​போது, விஷால் இயக்​கி, நடிக்​கும் ‘மகுடம்’ படத்​தைத் தயாரித்து வந்​தார். இந்​நிறு​வனத்​தின் 100-வது திரைப்​படத்தை விஜய் நடிப்​பில் தயாரிக்க இருப்​ப​தாக ஆர்​.பி.சவுத்ரி அறி​வித்​திருந்​தார். அது நடக்கவில்​லை. பின்​னர், ‘சூர்​ய ​வம்​சம்’ படத்​தின் 2-வது பாகத்​தைத் தயாரிக்க இருந்​தார்.

மறைந்த ஆர்​.பி.சவுத்​ரிக்கு சுரேஷ், ஜீவன், ஜித்​தன் ரமேஷ், ஜீவா ஆகிய மகன்​கள் உள்​ளனர். இதில் ஜித்​தன் ரமேஷ், ஜீவா ஆகியோர் படங்​களில் நடித்​து​ வருகின்​றனர். ஆர்​.பி.சவுத்​ரி​யின் இறு​திச் சடங்கு கிருஷ்ணாம்பேட்​டை​யில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here