நாகர்கோவில் கோட்டார் முதல் சவேரியார் கோவில் வரை சாலையோரம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதசாரிகள் சிரமப்படுவதோடு, விபத்துகளும் நிகழும் அபாயம் உள்ளது. இந்தச் சூழலில், போக்குவரத்தைச் சீரமைத்து விபத்துகளைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.















