தேங்காப்பட்டணம்: துறைமுகம் சீரமைக்க அமைச்சரிடம் மனு

0
289

அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று குமரி மாவட்டம் வந்திருந்தார். அவரை சந்தித்து கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: – தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் தற்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக துறைமுகத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். சேதமடைந்த துறைமுகத்தை சீரமைக்க மேலும் ரூ.   10 கோடி செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகம் சீரமைக்க 26 டன் எடை கொண்ட கற்களை அடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரிடம் மனு அளித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here