சிக்ஸர்கள் விளாசுவது மட்டும் டி20 கிடையாது – கொல்கத்தா கேப்டன் ரஹானே பாய்ச்சல்

0
54

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் முலான்​பூரில் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 112 ரன்​கள் இலக்கை விரட்​டிய நடப்பு சாம்​பி​யான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்​களில் 95 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து 16 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. அதி​கபட்​ச​மாக ரகு​வன்ஷி 37, கேப்​டன் அஜிங்க்ய ரஹானே 17, ஆந்த்ரே ரஸ்​ஸல் 17 ரன்​கள் சேர்த்​தனர்.

பஞ்​சாப் அணி தரப்​பில் யுவேந்​திர சாஹல் 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை​யும், மார்கோ யான்​சன் 3.1 ஓவர்​களை வீசி 17 ரன்​களை வழங்கி 3 விக்​கெட்​களை​யும் வீழ்த்தி அணி​யின் வெற்​றியில் முக்​கிய பங்கு வகித்​தனர். இவர்​களுக்கு உறு​துணையாக செயல்​பட்ட சேவியர் பார்ட்​லெட், அர்​ஷ்தீப் சிங், கிளென் மேக்​ஸ்​வெல் ஆகியோ​ரும் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

நடப்பு தொடரில் கொல்​கத்தா அணி 4-வது தோல்​வியை சந்​தித்​துள்​ளது. அந்த அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 தோல்​வி, 3 வெற்​றிகளு​டன் 6 புள்​ளி​களை பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. பஞ்​சாப் அணிக்கு எதி​ரான போட்​டிக்கு பின்​னர் கொல்​கத்தா அணி​யின் கேப்​டன் அஜிங்க்ய ரஹானே கூறிய​தாவது:

முலான்​பூர் ஆடு​களம் தட்​டை​யானது இல்​லை. பந்து வீச்​சாளர்​களுக்கு ஏதோ இருந்​தது. அதை நாங்​கள் சமாளிக்க வேண்​டியது இருந்​தது. சில நேரங்​களில் டி20 போட்​டிகளில் மெய்​டன் ஓவர் ஆட வேண்​டி​யிருந்​தா​லும் பரவா​யில்லை அல்​லது 70 முதல் 80 ஸ்ட்​ரைக் ரேட்​டில் விளையாடினாலும் பரவா​யில்​லை. அது சிறப்​பானது​தான். ஒரு பேட்​டிங் குழு​வாக ஸ்ட்​ரைக்கை ரொட்​டேட் செய்ய வேண்​டும். டி20 என்​பது சிக்​ஸர்​கள் அடிப்பது மட்​டுமல்ல.

இப்​போது, பெரும்​பாலான பேட்​ஸ்​மேன்​கள் பெரிய ஷாட்​களுக்​குச் செல்​வதை நாங்​கள் காண்​கிறோம், அவர்​கள் களத்​தில் நன்​றாக இருக்க விரும்பு​கிறார்​கள். ஆனால் சூழ்​நிலையை நன்கு புரிந்​து​கொள்​வதும், ஒரு பேட்​ஸ்​மே​னாக விளை​யாட்டு விழிப்​புணர்​வைக் கொண்​டிருப்​பதும் அதன் பின்​னர் விளை​யாட்டை முன்​னோக்கி எடுத்​துச் செல்​வதும் முக்​கி​யம். அதில்​தான் நாங்​கள் தேக்​கம் அடைந்​து​விட்​டோம்.

ஒரு கேப்​ட​னாக தோல்விக்​கான பொறுப்பை நான் ஏற்​றுக்​கொள்​கிறேன். ஆனால் தனிப்​பட்ட முறை​யில், அனைத்து வீரர்​களும், குறிப்​பாக பேட்​ஸ்​மேன்​கள், தங்​கள் சொந்த ஆட்​டத்​தைப் பற்றி சிந்​தித்து வரும் போட்​டிகளில் மேம்​படு​வார்​கள் என்று நம்​பு​கிறேன்.

தொடரில் பாதி முடிந்​து​விட்​டது, 7 ஆட்​டங்​களை விளை​யாடி​விட்​டோம். இன்​னும் 7 ஆட்​டங்​களே எஞ்​சி​யுள்​ளன. இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வந்து விளை​யாட வேண்​டும். சிஎஸ்​கேவுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் வெற்றி பெற்​ற​தால் நாங்​கள் மனநிறைவு அல்​லது அதிக நம்பிக்கையுடன் இருந்​தோம் என்று சொல்ல மாட்​டேன். இது பேட்​டிங் குழு​வின் ஒட்​டுமொத்த தோல்​வி. விதி​விலக்​காக பஞ்​சாப் அணி சிறப்​பாக பந்து வீசியது. இறு​திப் பகு​தி​யில் 3-4 விக்​கெட்​டு​களை இழந்​த​போது, அதிக நேரம் எடுத்​துக்​கொண்டு ஒன்​றொன்​றாக ரன்​கள் எடுத்​திருக்க வேண்​டும். ஏனெனில் அந்த நேரத்​தில்​ அது முக்​கிய​மானது. இவ்​வாறு ரஹானே கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here