கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோதைகிராமம் அருள்மிகு காசி விஸ்வநாதர் உடன் உரை விசாலாட்சி அம்பாள் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், களபம், மூலிகைச் சாறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றன. பிரதோஷ நாயகர் கோயிலில் மும்முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.