கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து மறைந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாரிசுகள் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அரசு போக்குவரத்து கழகத்தில் கருணை அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் கோரியுள்ளனர். மேலும், இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் தாமதம் காட்டுவதாகவும் ஆட்சியரிடம் அவர்கள் தெரிவித்தனர்.















