திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் முதன்மையான கடமை: அன்புமணி கருத்து

0
70

திமுக ஆட்​சியை அகற்​று​வதே எங்களின் முதன்மையான கடமை என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார்.

சேலத்​தில் நேற்று நடை​பெற்ற பாமக சேலம் ஒருங்​கிணைந்த மாவட்ட பொதுக்​குழுக் கூட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: சேலம் மாவட்​டம் பாமக கோட்​டை. இங்கு பாமக தனித்து நின்று 2 எம்​எல்​ஏ-க்​களைப் பெற்​றது. கடந்த சில வாரங்​களாக என் மீது வைக்​கப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் 100 சதவீதம் பொய்​யானவை. இதுகுறித்து சில நாட்​களில் விளக்​கம் அளிக்​கிறேன். கட்​சிக்​காக​வும், சமு​தா​யத்​துக்​காக​வும் சுமை​களைத் தாங்​கிக் கொண்​டிருக்​கிறேன்.

வன்​னியர்​களுக்​கான உள்​ஒதுக்​கீடு வழங்​கப்​படும் என்று கூறி 4 ஆண்​டு​களாக ஏமாற்​றி​விட்​டனர். இது​வரை தமிழகத்​தில் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​த​வில்​லை. நமக்கு துரோகம் செய்த திமுக​வுக்​கு, தேர்​தலில் பாடம் புகட்​டு​வோம். கடந்த தேர்​தலில் சேலம் மாவட்​டத்​தில் திமுக ஒரு தொகு​தி​யில் மட்​டுமே வெற்றி பெற்​றது. வரும் தேர்​தலில் ஒரு தொகு​தி​யில் கூட திமுக வெல்​லக் கூடாது. தரு​மபுரி​யிலும் ஒரு இடத்​தில்​கூட திமுக வெற்றி பெற​வில்​லை. வாக்​குறு​தி​களை நிறைவேற்​றாத, ஊழல் மிகுந்த திமுக ஆட்சி அகற்​றப்பட வேண்​டும்.

டாக்​டர் ராம​தாஸ் பிறந்​த​நாளான ஜூலை 25-ல் தமிழக மக்​கள் உரிமை மீட்பு நடைபயணம் தொடங்​கு​கிறேன். திமுக ஆட்​சியை அகற்​று​வது​தான் எங்களின் முதன்மையான கடமை. எம்​எல்​ஏ-க்​கள் ஜி.கே.மணி, ஆர்​.அருள் ஆகியோர் உடல்​நலக்​குறை​வால் மருத்​து​வ​மனை​யில் சேர்ந்​துள்​ளனர். இரு​வரும் பூரண உடல்​நலம், மனநலம் பெற கூட்​டுப் பிரார்த்​தனை செய்​வோம். இவ்​வாறு அன்புமணி பேசி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here