நித்திரவிளை அருகே உண்டியல் ஆலங்கோடு பகுதியில் செண்பகத்துமூட்டில் பத்ரேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வெளிப்பகுதியில் ஸ்டீல் குடத்தில் உண்டியல் ஒன்று காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடித்து கோயிலை பூட்டிவிட்டு நிர்வாகிகள் சென்றுள்ளனர். நேற்று காலை பக்தர்கள் கோயில் வந்து பார்த்தபோது உண்டியலை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் உண்டியலை தூக்கிச் சென்றுள்ளனர். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கோயில் திருவிழாவின்போது உண்டியல் திறந்து காணிக்கை எடுத்துள்ளனர். இந்த வருடம் அடுத்த மாதம் கோயில் திருவிழாவில் உண்டியல் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுசம்பந்தமாக கோயில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்து, வழக்குப் பதிவு செய்தனர்.
Latest article
குமரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.
நாகர்கோவில் மணிமேடை பகுதியில் வடசேரி போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) என்பதும், குமரியில் பல்வேறு இடங்களில் மோட்டார்...
குளச்சல்: பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் கைது
குளச்சலில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் ஜவகர் (55) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில்...
பாலப்பள்ளம்: ஐஆர்இஎல் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்
மணவாளக்குறிச்சியில் உள்ள ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட கடமாங்குழி சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் நேற்று, 6-ம் தேதி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்...














