குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2024 ஆம் ஆண்டு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கல்லூரியில் நடந்த பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவியின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.














