சுதந்திர போராட்ட தியாகி பொன்னப்ப நாடாருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி, நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில், சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதற்கான இடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.