கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆல்பர் மதியரசு தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 125 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.