புதுக்கடை அருகே கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தான சித்திரை திருவிழா தொடங்கியது. விழாவின் சமய மாநாடு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து அம்மன் பள்ளி வேட்டை இசை தகடு வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. நீதியரசர் வெளியிட கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் தலைவர் குமரேச தாஸ், செயலாளர் இராஜ குமார், பொருளாளர் முருகன் உட்பட பலர் பெற்றுக் கொண்டனர்.















