குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இனயம்புத்தன் துறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டதை கண்டித்தும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டச் செயலாளர் எஸ்கலின் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். இதில் கிளை உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.















