குளப்புறம், கூட்டப்புளி பகுதியைச் சேர்ந்த 72 வயதான சுசீலா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தனது வீட்டின் பின்பக்க சமையலறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
