கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா புகையிலை விற்பனை செய்வதாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அந்த பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். சோதனையில் கடையிலிருந்து 18 பாக்கெட் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் பாய் (62) என்பவர் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.