கிராத்தூர் பகுதியில் சாலையை கடக்கும் போது அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த ரெபேக்காள் (68) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் மதியம் இந்த சம்பவம் நடைபெற்றது. நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை அவர் உயிரிழந்தார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.















