சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில், கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பொது பார்வையாளர் மனிஷா சந்தியா தலைமையில், வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பது போல, தட்டில் வெத்திலை, பாக்கு, பழங்கள், மலர்களுடன் தேர்தல் அழைப்பிதழ் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.














