குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேற்று மாத்தூர் தொட்டி பாலம் பகுதியை பார்வையிட்டார். அப்போது, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தவெக வேட்பாளர் சபின் மாவட்ட ஆட்சியாளருக்கு மனு அளித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல் சம்பந்தமான புகார்கள் அலுவலகத்தில் பெற முடியாது என்றும், உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டால் உரிய பதில் அளிப்போம் என்றும், இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.















