கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் வீரர் நலத்துறை சார்பில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாமினை ஆட்சியர் அழகுமீனா, துவக்கி வைத்தார். அப்போது, மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் 55 பேர், கடன் கேட்டு விண்ணப்பித்த நிலையில், 25 பேருக்கு கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.