இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற ஆலன் ஜிஜோ (22) மற்றும் 18 வயது சிறுவன் ஒருவரை பிடித்து விசாரித்தபோது, விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இருவரையும் இரணியல் போலீசார் கைது செய்தனர்.
