தமிழக வாக்கு எண்ணிக்கையை பார்வையிட மே 2-ல் தேர்தல் பார்வையாளர்கள் வருகை

0
34

தமிழகம் முழு​வதும் 62 மையங்​களில் மே 4-ம் தேதி நடை​பெறும் வாக்கு எண்​ணிக்​கையை மேற்​பார்வையிட தேர்​தல் பார்​வை​யாளர்​கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்​றனர்.

தமிழகத்​தில் உள்ள 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கும் கடந்த ஏப்​.23-ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. எவ்​வித அசம்​பா​விதம், மறு வாக்​குப்​ப​தி​வும் இன்றி நடை​பெற்று முடிந்த இந்த தேர்​தலில் முன்​னெப்​போதும் இல்​லாத அளவு 85.10 சதவீதம் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன.

75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகளில் இருந்து பதி​வான வாக்​கு​கள் அடங்​கிய மின்​னணு இயந்​திரங்​கள், விவி​பாட் மற்​றும் கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள், அந்​தந்த தொகு​தி​கள் அடங்​கிய வாக்கு எண்​ணும் மையங்​களில் உள்ள ‘ஸ்​டி​ராங்’ அறை​களில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த ஸ்டி​ராங் அறை​களுக்கு 4 அடுக்கு பாது​காப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளதுடன், சிசிடிவி கேமரா மூல​மும் கண்​காணிக்​கப்​படு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணிக்கு வந்த துணை ராணுவப் படை​யினரில் ஒரு பிரி​வினர் அனைத்து வாக்கு எண்​ணும் மையங்​களி​லும் பாது​காப்​புக்கு நிறுத்​தப்​பட்​டுள்​ளனர்.

இதுத​விர வாக்கு எண்​ணிக்கை பாது​காப்​புக்​காக 18 ஆயிரம் போலீ​ஸார் பணி​ய மர்த்​தப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் வரும் மே 4-ம் தேதி 62 மையங்​களி​லும் காலை 8 மணிக்கு வாக்கு எண்​ணிக்கை தொடங்​கு​கிறது.

முதலில் தபால் வாக்கு எண்​ணிக்கை தொடங்​கப்​படும். அதன்​பின் மின்​னணு இயந்​திரங்​களில் பதி​வான வாக்​கு​கள் எண்​ணப்​படும் என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது.

பாது​காப்பு ஆலோ​சனை

இந்​நிலை​யில், தமிழகத்​தில் வாக்கு எண்​ணிக்கை பாது​காப்பு தொடர்​பாக, நேற்று தலை​மைச் செயல​கத்​தில் தலை​மைச் செயலர் எஸ்​.​சாய்​கு​மார் தலை​மை​யில் ஆலோ​சனை நடை​பெற்​றது.

இதில் டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர், சென்னை காவல் ஆணை​யர் அபின் தினேஷ் மோடக், ஆவடி காவல் ஆணை​யர் பிரேம் ஆனந்த் சின்​கா, தாம்​பரம் காவல் ஆணை​யர் சஞ்​சய்​கு​மார் உள்​ளிட்ட காவல் அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

இதில், வாக்கு எண்​ணிக்கை முடி​யும் வரை தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு பராமரிப்​பு, வாக்கு எண்​ணிக்கை நாளில் பாது​காப்பு உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

பார்​வை​யாளர்​கள் வருகை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, ஏற்​கெனவே சிறப்பு தேர்​தல் பார்​வை​யாளர் மற்​றும் தொகு​திக்கு ஒரு தேர்​தல் பார்​வை​யாளர், காவல் துறை பார்​வை​யாளர் மற்​றும் செல​வினப் பார்​வை​யாளர்​கள் என வெளி மாநில அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டிருந்​தனர்.

இவர்​களில் தேர்​தல் பார்​வை​யாளர்​கள் வாக்கு எண்​ணிக்​கையை மேற்​பார்​வை​யிட வரும் மே 2-ம் தேதி தமிழகம் வரு​கின்​றனர். 62 மையங்​களி​லும் பணி​யாற்​றும் வாக்கு எண்​ணிக்கை அலு​வலர்​களுக்​கான தேர்வு அந்​தந்த மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் முன்​னிலை​யில் ஏற்​கெனவே நடை​பெற்று முடிந்​துள்​ளது.

இந்​நிலை​யில், நேற்று தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தலை​மை​யில், சென்​னை​யில் 234 தொகு​தி​களுக்​கு​மான வாக்கு எண்​ணிக்கை அலு​வலர்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்​டது.

சென்னை மாநிலக் கல்​லூரி அரங்​கில் நடை​பெற்ற இதில், தேர்​தல் நடத்​தும் அலு​வலர், உதவி தேர்​தல் நடத்​தும் அலு​வலர் உட்பட 3 பேர் என 234 தொகு​தி​களுக்​கும் சேர்த்து ஆயிரம் பேர் பங்​கேற்​றனர்.

புதுச்​சேரி தேர்​தல் அலு​வலர் ஞானவேல் அனை​வருக்​கும் பயிற்சி அளித்​தார். இதில் வாக்கு எண்​ணிக்கை நடத்​து​வது, சுற்​று​வாரி​யாக முடிவு​களை வெளி​யிடு​வது, ஆவணங்​களை பாது​காப்​பது உள்​ளிட்ட பயிற்​சிகள் அளிக்​கப்​பட்​டன.

தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​கும் வாக்கு எண்​ணிக்கை தொடர்​பான அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​னார். இதில், கூடு​தல் தலை​மைத் தேர்​தல் அதி​காரி சிவ​ஞானம், இணை தலைமைத் தேர்தல் அதிகாரி ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி வே.ஸ்ரீதர், இணை தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர்.மேனுவல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here