திமுக ஆட்சி என்​பது நீதிக்​கட்​சி​யின் தொடர்ச்​சி​தான்: முதல்​வர் ஸ்​டா​லின் பெரு​மிதம்

0
55

திமுக​வின் ஆட்சி என்​பது நீதிக்​கட்​சி​யின் தொடர்ச்​சி​யான ஆட்​சி​தான் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெரு​மிதத்​துடன் கூறி​னார். தி​ரா​விட அறநெறி​யாளர் தமிழ்​வேள் பி.டி.​ராஜன் குறித்த `வாழ்வே வரலாறு’ நூல் வெளி​யீட்டு விழா, சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நூலை வெளி​யிட்டு பேசி​ய​தாவது:‘வாழ்வே வரலாறு’ என்ற நூலை நீதிக்​கட்​சி​யின் வழித்​தடத்​தில் உரு​வான திமுக தலை​வ​ராக இருந்து வெளி​யிடு​வதை என் வாழ்​நாளில் கிடைத்த பெரு​மை​யாக கருதுகிறேன்.

1936-ல் ஒருங்​கிணைந்த சென்னை மாகாணத்​தின் முதல்​வ​ராக இருந்த பி.டி.​ராஜனின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழகத்​தின் முதல்​வர் என்ற தகு​தி​யோடு, அந்த பெரு​மையோடு வெளி​யிடு​கிறேன். ‘பி.டி.​ராஜனின் அரிய ஆலோ​சனை​களை நிறைவேற்றி வைக்​கும் செயல் வடிவ​மாகத்​தான் திமுக ஆட்சி திகழ்​கிறது’ என்று மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி சொன்​னார். அந்த வழித்​தடத்​தில்​தான் நாமும் இன்​றைக்கு பயணித்​துக் கொண்​டிருக்​கிறோம். நான் அழுத்​தந்​திருத்​த​மாக சொல்​கிறேன். திமுக​வின் ஆட்சி என்​பது நீதிக்​கட்​சி​யின் தொடர்ச்​சி​யான ஆட்​சி​தான்.

இன்​றைக்கு எப்​படி திரா​விடத்தை ஒழிப்​போம் என்று பேசிக்​கொண்டு இருக்​கிறார்​களோ, அதே மாதிரி, பி.டி.​ராஜன் காலத்​தி​லும், “நீ​திக்​கட்​சியை குழி தோண்டி பாதாளத்​தில் புதைத்​து​விடு​வேன்” என்று ஒரு தலை​வர் சொன்​னார். ஆனால், பி.டி.​ராஜனோடு தொடர்ச்​சி​யாக, பண்​பாளர் பழனிவேல் ராஜன் வந்​தார். இப்​போது, பழனிவேல் தியாக​ராஜனும் நம்​முடன் இருக்​கிறார்.

நம்​முடைய பழனிவேல் தியாக​ராஜனை பொறுத்​தவரை, அறி​வார்ந்த, வலிமை​யான வாதங்​களை வைக்​கக் கூடிய​வர். நான் அவருக்கு கூற விரும்​புவது, இந்த சொல்​லாற்​றல் அவருக்கு பலமாக​தான் இருக்க வேண்​டுமே தவிர, அவரின் பலவீன​மாக ஆகி​விடக்​கூ​டாது. இதை ஏன் சொல்​கிறேன் என்​பது அவருக்கே தெரி​யும். நம்​முடைய எதிரி​கள், வெறும் வாயையே மெல்​லக் கூடிய வினோத ஆற்​றல் பெற்​றவர்​கள்.

அவர்​களின் அவதூறுகளுக்கு உங்​களின் சொல் அவலாக ஆகி​விடக் கூடாது என்​பதை கட்​சித் தலை​வ​ராக மட்​டுமல்ல, உங்​கள் மீது அக்​கறை கொண்​ட​வ​னாக​வும், அறி​வுரை வழங்க கடமைப்​பட்​டிருக்​கிறேன். நம்​முடைய எதிரி​களின் முகங்​கள்​தான் மாறி​யிருக்​கிறதே தவிர, அவர்​கள் உள்​ள​மும், எண்​ண​மும் இன்​னும் மாற​வில்​லை. அது மாறும் வரை நம்​முடைய போராட்​டம் ஓயாது தொடரும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

விழா​வில், திமுக பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன், அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன், சென்னை உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சி.டி.செல்​வம், ‘இந்​து’ என்​.​ராம், டிவிஎஸ் நிறு​வனத்​தின் தலை​வர் வேணு சீனி​வாசன், மதுரை மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயில் அறங்​காவலர்​ குழு தலை​வர்​ ருக்​மணி பழனிவேல்​ ராஜன்​ உட்​பட பலர்​ பேசினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here