எர்ணாகுளம் தேவாலயத்துக்காக இரு தரப்பினர் மோதல்: கேரளாவில் பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு

0
21

கேரளாவின் எர்ணாகுளம் பகு​தி​யில் உள்ள தேவாலயத்துக்​காக இரு தரப்​பினர் கடும் மோதலில் ஈடு​பட்​டனர். இதுதொடர்​பாக பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்​ளது.

கேரள மக்​கள் தொகை​யில் சுமார் 18.4 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் ஆவர். அந்த மாநிலத்​தில் பல்​வேறு கிறிஸ்தவ சபைகள் செயல்​படு​கின்​றன. இந்த சபைகளுக்கு இடையே அவ்வப்​போது மோதல்​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன. கேரளா​வின் எர்ணாகுளம் மாவட்​டம், பிரமடத்​தில், செயின்ட் ஜான்ஸ் பெத்லேகம் தேவால​யம் உள்​ளது. ஜேக்​கபைட் சிரியன் கிறிஸ்தவ சபை​யும், மலங்​கரா ஆர்த்​த​டாக்ஸ் சிரியன் சபை​யும் இந்த தேவால​யத்தை சொந்​தம் கொண்​டாடி வரு​கின்​றன.

தற்​போது ஜேக்​கபைட் சிரியன் கிறிஸ்தவ சபை​யின் கட்​டுப்​பாட்​டில் தேவால​யம் உள்​ளது. அங்கு கடந்த ஞாயிற்​றுக்​கிழமை காலை ஆராதனை நடை​பெற்​றுக் கொண்​டிருந்​தது. அப்​போது மலங்​கரா ஆர்த்​த​டாக்ஸ் சிரியன் சபையைச் சேர்ந்த பாதிரி​யார், நிர்​வாகி​கள் திடீரென தேவால​யத்​துக்​குள் நுழைந்து தனி​யாக ஆராதனை நடத்த முயன்​றனர். இதை ஜேக்​கபைட் சபை நிர்​வாகி​கள் தடுத்​தனர்.

இருதரப்​புக்​கும் இடையே மிகப்​பெரிய அளவில் மோதல் ஏற்​பட்​டது. பாதிரி​யார்​களும் சண்​டை​யில் களமிறங்​கினர். இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்​பட்​டது. தகவல் அறிந்து ராமமங்​கலம் பகுதி போலீ​ஸார் தேவால​யத்​துக்கு விரைந்து சென்று இருதரப்​பினரை​யும் விலக்கி விட்​டனர்.

இதுதொடர்​பாக மலங்​கரா ஆர்த்​த​டாக்ஸ் சிரியன் சபை​யின் பாதிரி​யார் அபின் ஆபிர​காம் உட்பட அந்த சபையைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது. ஜேக்​கபைட் சிரியன் கிறிஸ்தவ சபையை சேர்ந்த பாதிரி​யார் லால்​மோன் தம்பி உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “வீடியோ ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் தேவால​யத்​துக்​குள் தாக்​குதலில் ஈடு​பட்ட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது. அவர்​களை தீவிர​மாக தேடி வரு​கிறோம். விரை​வில் அனை​வரும் கைது செய்யப்படுவார்கள்” என்​றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here