தமிழகத்தின் பண்பாட்டை அழிக்க மத்திய அரசு முயற்சி: முதல்வர் ஸ்டாலின்

0
134

டெல்​லி​யில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார். சேலத்​தில் நேற்று ரூ.1,649 கோடி மதிப்​பில், ஒரு லட்​சம் பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கிய முதல்​வர் ஸ்டா​லின், புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி, முடிவுற்ற திட்​டப் பணி​களை திறந்து வைத்​தார்.

சேலம் அரசு மருத்​து​வக் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெற்ற இந்​நிகழ்ச்​சி​யில், ஆட்​சி​யர் பிருந்​தாதேவி வரவேற்​றார். அமைச்​சர்​கள் எ.வ.வேலு, எம்​ஆர்​கே.பன்​னீர்​செல்​வம், ராஜேந்​திரன் முன்​னிலை வகித்​தனர்.

நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது:டெல்டா பாசனத்​துக்கு மேட்​டூர் அணை​யில் இருந்து 4-வது ஆண்​டாக உரிய காலத்​தில் நீர் திறந்து வைத்​த​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன். உழவர்​களுக்கு இன்​னும் மகிழ்ச்​சியை கூட்​டும் வகை​யில், நெல் குவிண்​டாலுக்கு ரூ.2,500 வழங்​கப்​படும். அதற்​கேற்ப சாதாரண ரகத்​துக்கு ரூ.131, சன்ன ரகத்​துக்கு ரூ.156 கொள்​முதல் விலை உயர்த்தி வழங்​கப்​படும். இனி சாதாரண ரகம் ரூ.2,500-க்​கும், சன்ன ரகம் ரூ.2,545-க்​கும் கொள்​முதல் செய்​யப்​படும். இதனால், 10 லட்​சத்​துக்​கும் அதி​க​மான விவ​சா​யிகள் பயனடைவர்.

மதுரை வந்த அமித்​ஷா, தமிழக அரசை குறைசொல்லி விட்​டுப் போயிருக்​கிறார். மத்​திய அரசின் திட்​டங்​களை மடை​மாற்​றம் செய்​து, மக்​களுக்​கான நன்​மை​களை கிடைக்​க​வி​டா​மல் செய்​வ​தாக கூறி​யிருக்​கிறார். உண்​மை​யில், குடிநீர், வீடு கட்​டு​தல் என அனைத்து திட்​டங்​களை​யும், மத்​திய அரசு நிதி​யைக் கொண்டு செயல்​படுத்த முடி​யாத நிலை​தான் உள்​ளது. பிரதமர் பெயர் வைத்​துள்ள திட்​டங்​களுக்கே மாநில அரசு 50 சதவீதத்​துக்கு மேல் நிதி ஒதுக்​கீடு செய்​கிறது. இதை எப்​படி அவர் குறை சொல்ல முடி​யும்.

தமிழகத்​துக்கு மத்​திய அரசு எந்த சிறப்​புத் திட்​டத்​தை​யும் அறிவிக்​க​வில்​லை, நிதி​யும் கொடுக்​க​வில்​லை. மிகச் சில திட்​டங்​களுக்கு ஒதுக்​கும் பணமும் முழு​மை​யாக வந்து சேரு​வ​தில்​லை. 10 ஆண்​டு​களாகி​யும் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டப்​பட​வில்​லை. ஆனால், கடந்த 4 ஆண்​டு​ கால திமுக ஆட்​சி​யில் மதுரை​யில் பிரம்​மாண்ட நூல​கம், ஜல்​லிக்​கட்டு அரங்​கம், கீழடி அருங்​காட்​சி​யகம் என பல்​வேறு திட்​டங்​களை நிறைவேற்​றி​யுள்​ளோம்.

தமிழகத்​தின் தொன்​மையை மறைக்​க​வும், பண்​பாட்டை அழிக்​க​வும்​தான் மத்​திய அரசு முயற்​சிக்​கிறது. இதையெல்​லாம் தட்​டிக் கேட்க எதிர்க்​கட்​சித் தலை​வருக்கு துணிவு கிடை​யாது. தமிழக மக்​கள் சுயமரி​யாதை உள்​ளவர்​கள். டெல்​லி​யில் இருந்து வருபவர்​களை ஒரு​போதும் தமிழகத்தை ஆள விட​மாட்​டோம். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here