அஜித்குமார் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையே போதும்: குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் வலியுறுத்தல்

0
40

மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கை சிபிஐ விசா​ரித்​தால் தாமதம் ஏற்​படும். எனவே, நீதி​மன்ற நேரடிக் கண்​காணிப்​பில் சிபிசிஐடி விசா​ரணையே போது​மானது என்று அஜித்​கு​மார் குடும்ப வழக்​கறிஞர் கணேஷ்கு​மார் கூறி​னார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் (27), நகை திருட்டு புகார் தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார். இந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்​குப் பரிந்​துரை செய்து தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதற்​கிடை​யில், அஜித்​கு​மாரின் குடும்ப வழக்​கறிஞர் கணேஷ்கு​மார் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: இந்த வழக்​கில் தகவல் தெரிந்​தவர்​கள் யாராக இருந்​தா​லும், பயப்​ப​டா​மல் வந்து நீதிப​தி​யிடம் சாட்​சி​யம் அளிக்​கலாம். ஜூலை 6-ம் தேதி வரை மாவட்ட நீதிபதி விசா​ரணை நடத்த உள்​ளார். கொலை வழக்​கில் 6-வது குற்​ற​வாளி​யான போலீஸ் வேன் ஓட்​டுநரை​யும் கைது செய்​யு​மாறு வலி​யுறுத்​தி​யுள்​ளோம்.

அஜித்​கு​மாரை தாக்​கிய தனிப்​படை போலீ​ஸார் 6 பேர், ஆய்​வாளர், டிஎஸ்​பி, எஸ்​.பி. புகார் தெரி​வித்த நிகிதா ஆகிய 10 பேர் ஜூன் 27 முதல் 30-ம் தேதி வரை யார் யாருடன் செல்​போனில் பேசி​யுள்​ளனர் என்ற விவரங்​களைக் கேட்​டுள்​ளோம். இந்த விவரங்​கள் மூலம் உண்​மை​ வெளிச்​சத்​துக்கு வரும். பொது​வாக சிபிஐ விசா​ரிக்​கும் வழக்​கு​களில் தாமதம் ஏற்​படு​கிறது. எனவே, சிபிசிஐடி போலீ​ஸார் 30, 40 நாட்​களுக்​குள் விரைந்து விசா​ரித்​து, குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​து, தாமதமின்றி நீதிவழங்க வேண்​டும் என்​பதே எங்​களின் கோரிக்​கை​யாகும். எனவே, சிபிஐ விசா​ரணை தேவை​யில்​லை. நீதி​மன்​றத்​தின் நேரடிக் கண்​காணிப்​பில் சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணை நடக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here