போர்ச்சுகலில் நடைபெற்ற மையா சிடாடே டோ டெஸ்போர்டோ 2025 தடகளப் போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீ சங்கர் தங்கம் வென்றார். இந்தப் போட்டிகள் போர்ச்சுகலின் மையா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றன. இந்தப் போட்டியில் நீளம் தாண்டுதலில் பிரிவில் பங்கேற்ற முரளி ஸ்ரீசங்கர், 7.75 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். போலந்து வீரர் பியோட்டர் டார்கோவ்ஸ்கி 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் கிறிஸ் மித்ரேவ்ஸ்கி...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2024-ம் நிதியாண்டில் ரூ.9,741.7 கோாடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதில், ஐபிஎல் மூலமான வருவாய் முக்கிய ஆதாரமாக உள்ளது புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.அதன்படி ஐபிஎல் மூலமாக பிசிசிஐ-க்கு கிடைத்த வருவாய் பங்குமட்டும் ரூ.5,761 கோடியாக உள்ளது. மேலும், மகளிர் பிரீமியர் லீக் மற்றும் உலகளாவிய உரிமைகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை மூலமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான வருவாய் ஆதாரத்தை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. ஐபிஎல்...
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஹராரேவில் நியூஸிலாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதவரே 32 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். பிரையன் பென்னட் 21, டோனி முன்யோங்கா 13, கேப்டன்...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 16-ம் தேதி சவும்தாம்டனில் நடைபெற்றது. இதில் 259 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 18-வது ஓவரின் போது இந்திய தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவல், ஒரு ரன் எடுப்பதற்காக ஓடிய போது இங்கிலாந்து...
மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை ஐசிஎஃப் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று யு-19 மகளிர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் மயிலாப்பூர் கிளப்பை சேர்ந்த என்.ஷர்வானி 11-5, 11-2, 11-7 என்ற செட் கணக்கில் எஸ்.வர்ஷினியை (பிடிடிஏ) வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். ஹன்சினி (சென்னை), நந்தினி (எம்விஎம்), மெர்சி (ஏசிஇ), ஷாமீனா ஷா (மதுரை), அனன்யா (சென்னை அச்சீவர்ஸ்), புவனிதா...
கடந்த ஆண்டு நடைபெற்ற யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருந்தார் ரைலி நார்டன். இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்று வரும் நடப்பு ரக்பி யு20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை அவர் இறுதிப் போட்டி வரை கேப்டனாக வழிநடத்தி முன்னேற செய்துள்ளார்.
19 வயதான அவர் தென் ஆப்பிரிக்காவின் அபார விளையாட்டு திறன் படைத்த இளம் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். கிரிக்கெட்...
எம்சிசி முருகப்பா ஹாக்கிப் போட்டியின் அரை இறுதியில் இந்தியன் ரயில்வேஸ், ஐஓசி அணிகள் மோதவுள்ளன.
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (ஜூலை 19) மாலை 4 மணிக்கு இந்த அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள 2-வது அரை இறுதிப் போட்டியில் இந்திய கடற்படை அணியும் (ஐஎன்என்), இந்திய ராணுவ அணியும் (ஐஎன்ஏ) மோதவுள்ளன.
முன்னதாக, நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரயில்வே விளையாட்டு...
சென்னையில் அக்டோபர் 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி(டபிள்யூடிஏ) நடைபெறவுள்ளது.
அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த மகளிர் டென்னிஸ் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகளும் (ஒற்றையர் பிரிவு), இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் பங்கேற்று விளையாட உள்ளனர். போட்டியில்...
பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் இடம் பெறுவதற்காக தற்போதுள்ள வீரர்கள் தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில்...
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இதையடுத்து கடந்த வாரம்...










