மதுரை பிரச்சினைகளை டெல்லியில் அவர் என்றாவது பேசியுள்ளாரா? – சு.வெங்கடேசனுக்கு எதிராக கொந்தளித்த மேயர், கவுன்சிலர்கள்
admin - 0
‘திமுக தொண்டர்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்ததாலேயே சு.வெங்கடேசன் எம்.பி.யாகியுள்ளார்’ என்று மாநகராட்சி கூட்டத்தில் திமுக மேயரும், அக்கட்சியின் கவுன்சிலர்களும் கொந்தளித்தனர்.
இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை கடைசி இடம் பிடித்தது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்திருந்தார். மதுரை நகரின் தூய்மை மோசமாக உள்ளது, மாநகராட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தூய்மையைப் பாதுகாக்க முதல்வர் தலையிட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில்...
கிராம ஊராட்சிகளில் சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: இது உழைக்கும் வர்க்கத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. விலைவாசி உயர்வு, மின்கட்டணம், குடிநீர் கட்டணம், பால்விலை உயர்வு என தள்ளாடும் சிற்றுண்டிக் கடைகளை மொத்தமாக இழுத்து மூட முடிவு செய்து விட்டதா திமுக அரசு.
ஏழை, எளிய மக்களின் தோள்களின் மீது நிதிச் சுமை ஏற்றப்படுவதை...
திருவாரூர் மாவட்ட திமுக-வில் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, 18 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை வென்றபோதும் தொகுதியில் அவருக்கான ஆக்டிங் எம்எல்ஏ-வாக இருந்த கலைவாணன், இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், இதே மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜாவும் அதற்கான போட்டியில் இருந்ததால் இருவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்காமல் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது தலைமை.
இதனால்,...
‘தமிழகம் என்றுமே ஆன்மிகம் தழைத்தோங்கும் புண்ணியபூமி என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜேந்திர சோழனின் வீர வரலாற்றின் ஆயிரமாவது வெற்றி விழாவில் பங்கேற்பதற்காகவும், தூத்துக்குடி நவீன விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி 26-ம் தேதி இரவு தமிழகம் வந்தார்.
தூத்துக்குடி விமான நிலைய...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல் துறை செல்வப்பெருந்தகையை விசாரிக்க தவறிவிட்டது: பகுஜன் சமாஜ் வாதம்
admin - 0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையிடம் விசாரிக்க காவல் துறை தவறிவிட்டது என பகுஜன் சமாஜ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை செம்பியம் காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐக்கு...
பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை வழங்குவது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் ஆலோசனை செய்து வருகிறது.
இது தொடர்பாக அத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மாநகர பேருந்துகளில்கால் ஊன்ற இடம் இல்லாத அளவுக்கு கடுமையான நெரிசல் காணப்படும்.
இவற்றை கருத்தில் கொண்டு பெண் பயணிகள் அதிகமாக பயணிக்கும்...
கிண்டி பேருந்து நிலையத்தில் ரூ.400 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் தடத்திலும், தாம்பரம் - பிராட்வே பேருந்து வழித்தடத்திலும் கிண்டி முக்கிய மையமாக உள்ளது.
கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இருப்பதால், பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். தினசரி ஒரு லட்சத்துக்கும்...
தஞ்சாவூர் முத்துக்குமார மூப்பனார் சாலையில் திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயம் உள்ளது. இந்நிலையில், 2010 முதல் 2025-26-ம் நிதியாண்டு வரை மாநகராட்சிக்கு சொத்துவரி புதைசாக்கடை வரி என ரூ.34,46,396-ஐ 15 நாட்களுக்குள் செலுத்துமாறு கலைஞர் அறிவாலயத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கலைஞர் அறிவாலயத்துக்கு வணிகப் பயன்பாட்டுக்கான வரி செலுத்துமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அறிவாலயத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் நூலகம்...
சென்னையில் இருந்து துர்காபூர் புறப்பட இருந்த விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு
admin - 0
சென்னையிலிருந்து துர்காபூர் புறப்பட இருந்த விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாரானது. விமானத்தில் 158 பயணிகள், 6 விமான ஊழியர்கள் இருந்தனர்.
விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, விமானம் ஓடுபாதையில் ஓட இருந்தபோது, விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி, விமான கேப்டன் கேபினில் ஒலித்தது. இதையடுத்து...
நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன?
admin - 0
நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இவர் சாதிரீதியாக நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பியிருந்தார். இந்தப் புகார் வழக்கறிஞர்கள் வாட்ஸ்அப் குழுவில் வைரலானது.
இந்நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனம்...






