Google search engine
திருச்சி அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வேன் ஓட்​டுநர் தாக்கப்பட்ட வழக்​கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்​கால முன்​ஜாமீன் வழங்​கப்​பட்டது. திருச்சி மாவட்​டம் துறையூரில் பழனி​சாமி பங்​கேற்ற பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது அந்த இடத்தை கடக்க முயன்ற 108 ஆம்​புலன்ஸ் தடுத்து நிறுத்​தப்​பட்டு, ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் தாக்​கப்​பட்​டார். இது தொடர்​பாக அதி​முகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீ​ஸார் வழக்​குப்பதிவு...
அ​தி​முக வாக்​குச்​சாவடி கிளை நிர்​வாகி​களை தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்த மாவட்​ட​வாரி​யாக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதுதொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 2026 சட்​டப் பேரவை தேர்​தலில், அதி​முக அனைத்து தொகு​தி​களி​லும் வெற்றி பெறும்​வகை​யில், சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு உட்​பட்ட ஒன்றிய, நகர, பேரூ​ராட்சி மற்​றும் மாநக​ராட்​சிப் பகு​தி​களில், வாக்​குச்​சாவடி (பாகம்) கிளை​கள் முழு​மை​யாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் நிர்​வாகி​கள் அனை​வரை​யும் ஆன்​லைனில் ஒருங்​கிணைத்​து, அவர்​களுக்கு தக்க பயிற்சி அளிக்க வேண்​டும்....
அமெரிக்க வரிவிதிப்பு பாதிப்பை சமாளிக்க உதவி திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலிருந்து அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் 87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலராக குறையக்கூடும் என்றும், இதன் காரணமாக இந்திய ஏற்றுமதித் துறை நிலைத் தன்மை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்றும்...
அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் போலீஸார் ஏன் தாமதம் செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் என்.வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான அரசு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் போலீஸார் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடிக்கு முறைகேடு நடந்ததாக...
டிஎன்​பிஎஸ்சி தேர்​வுக்கு கேள்வி தயார் செய்​வ​தில் கவனக்​குறைவுடன் செயல்​படு​வ​தாக தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: இளநிலை உதவி வரை​வாளர் பணிக்​கான டிஎன்​பிஎஸ்சி தேர்​வில், அய்யா வைகுண்​டர் குறித்த கேள்​வி​யின் ஆங்​கில மொழிபெயர்ப்​பில், முடிசூடும் பெரு​மாள் என்ற அய்யா வைகுண்​டரின் பெயர், ‘தி காட் ஆஃப் ஹேர்​கட்​டிங்’ (The God of Hair Cutting) என்று மொழிபெயர்க்​கப்​பட்​டுள்​ளது. கவனக்​குறை​வாக​வும்,...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் அளித்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி இறந்த அஜித்குமாரின் தாயார் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது...
குற்ற வழக்​கில் தொடர்​புடைய மதுரை ஆதீனம் பதவி விலக வேண்​டும், அந்த இடத்​தில் தன்னை நியமிக்க வேண்​டும் என ஆதீன மட ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்​பு​ரான், மாவட்ட ஆட்​சி​யரிடம் நேற்று மனு அளித்​தார். இதுகுறித்து அளித்த மனு: மதுரை ஆதீன மடத்​தின் தம்​பு​ரா​னாக குரு​மகா சந்​நி​தானத்​தின் கரங்​களால் தீட்சை பெற்​று, கடந்த 2018 ஜூலை முதல் பணி​யாற்றி வரு​கிறேன். தற்​போது, 293-வது ஆதீனத்​தின் கீழ் தம்​பு​ரா​னாகப் பணிபுரிந்து வரு​கிறேன். வேறு ஒருவருக்கு...
பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பகுதியில் 5 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விமான நிலையம் அமைக்க ஏகனாபுரத்தில் உள்ள காலி ஏரியை...
வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணை குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் என மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்...
கடலூரில் நாளை நடைபெற உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பட்டியலினத்தவர்கள் கலந்து கொள்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 28ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் பொதுக்கோவில் அல்ல எனக்கூறி கோவிலுக்கு...