கோபியில் கட்சியினருடன் நேற்று ஆலோசனை நடத்திய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவதாக அறிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அன்னூரில் நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததைக் கண்டித்து, முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் விழாவைப் புறக்கணித்தார்.
தொடர்ந்து, பழனிசாமியின் பெயரை...
மேஷம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
ரிஷபம்: மன இறுக்கம் நீங்கும். முகப் பொலிவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். வியாபாரத்தில்...
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட கட்சியின் புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் அன்புமணியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாமக மற்றும் வன்னியர் சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கட்சி வளர்ச்சிப் பணிகள், அன்புமணி செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, கட்சியின் புதிய உறுப்பினர் அடையாள அட்டை...
தலைமை ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்: வீடியோ வைரலான நிலையில் இடமாற்றம் செய்து உத்தரவு
admin - 0
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவர்கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளார்.
அரூர் அருகேயுள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமை ஆசிரியை...
ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில், ஆசிரியர்களை தமிழக அரசு எக்காரணம் கொண்டும் கைவிடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்டன. இதில், திருச்சி கே.கே. நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. இந்நிலையில், இப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வகுப்புகளை நேற்று தொடங்கி வைத்து, பள்ளியில்...
திருச்சி அருகே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூரில் பழனிசாமி பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த இடத்தை கடக்க முயன்ற 108 ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீஸார் வழக்குப்பதிவு...
அதிமுக வாக்குச்சாவடி கிளை நிர்வாகிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தலில், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்வகையில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், வாக்குச்சாவடி (பாகம்) கிளைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.
இதன் நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு தக்க பயிற்சி அளிக்க வேண்டும்....
அமெரிக்க வரிவிதிப்பு பாதிப்பை சமாளிக்க உதவி திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலிருந்து அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் 87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலராக குறையக்கூடும் என்றும், இதன் காரணமாக இந்திய ஏற்றுமதித் துறை நிலைத் தன்மை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்றும்...
அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் போலீஸார் ஏன் தாமதம் செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் என்.வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான அரசு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் போலீஸார் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடிக்கு முறைகேடு நடந்ததாக...
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கேள்வி தயார் செய்வதில் கவனக்குறைவுடன் செயல்படுவதாக தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயர், ‘தி காட் ஆஃப் ஹேர்கட்டிங்’ (The God of Hair Cutting) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாகவும்,...










