கடலூர் சிப்காட்டில் கெம்ப்ளாஸ்ட் நிறுவன விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூரில் கடந்த 1971-ம் ஆண்டு முதல் இயங்கிவரும் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் பெரும்பாலும் பூச்சிக்கொல்லி, பெயிண்ட், சாயப்பட்டறை, மருந்து, ரசாயனம் மற்றும் பிவிசி போன்ற அபாயகரமான ரசாயனங்களை கையாளக்கூடிய ‘பெரிய சிவப்பு’ வகை நிறுவனங்களே செயல்படுகின்றன.
இந்த தொழிற்சாலைகளால் சிப்காட்டுக்கு அருகமைப் பகுதிகளில் வசிக்கும் 50-க்கும்...
“விழுப்புரம் சிதம்பரம் கட்சியாக செயல்படும் விசிக-வை திருமாவளவன் கலைத்து விட வேண்டும்” – தமிழக பாஜக
admin - 0
தேர்தல் அரசியலுக்காக திமுகவிடம் அடமானம் வைத்து, விழுப்புரம் சிதம்பரம் கட்சியாக செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமாவளவன் கலைத்து விட வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நீதி என்ற பெயரால் தமிழ் சமுதாயத்தை தேர்தல் கலக்சன் அரசியலுக்காக குத்தி கிழித்து, சீரழித்துக் கொண்டிருக்கும் திருமாவளவன், இனி வேல் பிடித்து வீதி வீதியாக திரிந்தாலும் அலகு...
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு இந்திரா காந்தி பெயரையே சூட்ட வேண்டும் – செல்வப்பெருந்தகை
admin - 0
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில் ரூபாய் 25 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு பெயர் வைப்பதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. நீண்டகாலமாக திண்டிவனம் பேருந்து நிலையத்திற்கு முன்னாள்...
கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக பாமக செயற்குழு, பொதுக்குழு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் மீது அன்புமணி தரப்பு புகார் அளித்துள்ளது.
பாமக சார்பில் ‘2025-க்கு விடை கொடுப்போம். 2026-ஐ வரவேற்போம்’ என்ற தலைப்பில் புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள்...
‘இபிஎஸ் அரசியல் வாழ்க்கையின் முடிவுரை…’ – 100 நாள் வேலை திட்ட பிரச்சினையில் ஸ்டாலின் காட்டம்
admin - 0
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) பாஜக அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “விபி ஜி ராம் ஜி (VBGRAMG)-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட...
சென்னையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக சமீபத்தில் நியமித்தது. இந்நிலையில், பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று வந்தார். தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா டிச.26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “உத்தரப் பிரதேசம் கான்பூரில், கடந்த 1925-ம் ஆண்டு டிச.26-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமை தாங்கி உரையாற்றினார். கட்சி தொடங்கப்பட்டது...
“திருப்பரங்குன்றம் தீபத்தூணை ‘சர்வே கல்’ என்று சொல்ல கனிமொழி என்ன மத்திய தொல்லியல் அலுவலரா?” என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பினார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாத தவெக தலைவர் விஜய் மீது அவர் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி தரிசனம் செய்தார். பின்பு மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். அதைத்...
காவல் துறை அதிகாரிகள் வீட்டில் ஒரு ஆர்டர்லி கூட இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்
admin - 0
தமிழகத்தில் தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஒருவர்கூட ஆர்டர்லியாக இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அரசுத் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் தூய்மைப் பணி, தோட்டப் பணி மற்றும் இதர வீட்டு வேலைகளில் கீழ்நிலை பணியாளர்களை ஈடுபடுத்தும் ‘ஆர்டர்லி’ முறை, தமிழகத்தில் பல்வேறு துறைகளில் நடைமுறையில் இருந்து வந்தது.
இந்நிலையில், காவல் துறையில் ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்க...
பொங்கலுக்கு மூவாயிரம்… போனஸாகப் பத்தாயிரம்! – கரன்சி திட்டங்களுடன் காத்திருக்கும் கட்சிகள்
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக-வும் மாநிலத்தை ஆளும் திமுக-வும், வாக்காளர்களை ‘கவர’ கரன்சி திட்டங்களை செயல்படுத்தத் தயாராகி வருகின்றன.
விடுபட்ட மகளிரில் 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை அண்மையில் வங்கிக் கணக்கில் வரவுவைத்த திமுக அரசு, அடுத்ததாக இந்தப் பொங்கலுக்கு குடும்ப அட்டை தவறாமல் மூவாயிரம் ரூபாய் பரிசு கொடுக்கும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். நிலவரத்தைப் பொறுத்து இது ஐயாயிரமும்...
