டிஜிட்டல் ஆவணங்களின் நகல் கோரி தாக்கல் செய்த செந்தில் பாலாஜி மனு மீது டிச.16-ல் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை தரக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீது வரும் டிச.16-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜி்ட்டல்...
சென்னையில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 85 லட்சம் நிதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ரூ.75 லட்சம் நிதயுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல்வரின் ஆணையின்படி, 2023-ம் ஆண்டு ரூ. 85 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் வரும் 12 முதல் 19-ம் தேதி வரை...
புதிய தலைமுறை ரசிகர்களை உருவாக்குகிறோம்: கர்னாடக இசை கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் பெருமிதம்
admin - 0
இருட்டை விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட, ஒரு மெழுகுவத்தியை ஏற்றிவைப்பது சிறந்த செயல் என்பர். அப்படிப்பட்ட ஒரு செயலைத்தான் சென்னை, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் கடந்த ஞாயிறன்று, உலக கர்னாடக இசைக் கலைஞர்களின் கூட்டமைப்பு முன்னெடுத்தது.
டிசம்பர் மாதத்தில் எண்ணற்ற சபாக்களால் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான மார்கழி இசை, நாட்டிய திருவிழாக்களின் சிறப்புக்காக இந்தியாவின் கலாச்சார தலைநகராக சென்னை மாநகரம் கொண்டாடப்பட்டாலும், சபாக்களில் ரசிகர்களின் கூட்டம் குறைந்துகொண்டே வருகிறது.
கர்னாடக இசை உலகுக்கு புதிய ரசிகர்களை...
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது சென்னை புத்தகக் காட்சி டிச.27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, சென்னை நந்தனத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் (பபாசி) சங்கத்தின் தலைவர் எஸ்.சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 48-வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டிச.27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி...
அயனாவரம் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களை என்கவுன்ட்டர் செய்தால் கூட மக்கள் எதிர்க்கமாட்டார்கள்: நடிகை கஸ்தூரி
admin - 0
அயனாவரம் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களை என்கவுண்ட்டர் செய்தால் கூட மக்கள் எதிர்க்கமாட்டார்கள் என நடிகை கஸ்தூரி ஆவேசமாக தெரிவித்தார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கர்களுக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று எழும்பூர் காவல் நிலையம் வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம்...
ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ள பாதிப்பில் பள்ளி மாணவர்களின் பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள், பைகள், சான்றிதழ்கள் ஆகியவை சேதம் அடைந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் களத்தில் ஆய்வு செய்து அதுதொடர்பான புள்ளி விவரங்களை பள்ளி கல்வித்துறை வசம் ஒப்படைத்தனர்.அதில் கடலூர் மாவட்டத்தில்...
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுதலை செய்த காவல் துறைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10-க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய செய்தி அதிர்ச்சிஅளிக்கிறது. இது...
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு நிதி கல்வியறிவை மேம்படுத்துதல், வங்கி சேமிப்பு கணக்கை தொடங்குதல், வங்கி கடன் பெறுவதற்கான வழிவகைகள், காப்பீடு, ஓய்வூதிய சேவைகள் போன்ற நிதி சேவைகளை வழங்குவதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிதிசார் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. நிதிசார் கல்வியானது மகளிர்...
வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் விதமாக மூன்று பேருக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் நடைமுறையில் உள்ளது.
நவம்பர் மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த மாதத்துக்கான 13 வெற்றியாளர்களை கணினி குலுக்கல்...
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-வது குருமகா சந்நிதானத்துக்கு நேற்று 12-ம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறையில் பழமைவாய்ந்த சைவ திருமடங்களுள் ஒன்றான, திருவாவடுதுறை ஆதீன திருமடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 23-வது குருமகா சந்நிதானமாக திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தோன்றிய ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 1983 முதல் 2012-ம் ஆண்டு வரை ஞானபீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்து வந்தார். இவர்,...










