அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதில் அலட்சியம் என குற்றச்சாட்டு
admin - 0
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதில் தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டுவதாக ஓய்வூதியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர், பணிமனை தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 1.50 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக்...
நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவு அகற்றம்: 16 லாரிகளில் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்பட்டது
admin - 0
நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் நேற்று கேரள அதிகாரிகளால் அகற்றப்பட்டு, 16 லாரிகளில் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்பட்டது.
நெல்லை நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் புற்றுநோய் மருத்துவமனையின் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர், பேட்டையைச் சேர்ந்த மாயாண்டி, சேலம் ஓமலூரைச் சேர்ந்த சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்லதுரை, கேரள...
அம்பேத்கரை இழிவாகப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்புக் கேட்டு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் நாளை (டிச.24) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ஏ.செல்லக்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற விவாதத்தின்போது அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா கேலியாகவும் இழிவாகவும் பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது....
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அன்று மாலை அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்தது....
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு டிசம்பர் 26-ம் தேதி எமிஸ் தளம் மூலம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டு வட்டாரக்கல்வி அலுவலர்...
சர்வதேச சிறு, குறுந்தொழில்கள் கண்காட்சி 27-ம் தேதி தொடக்கம்: சென்னையில் 3 நாட்கள் நடைபெறுகிறது
admin - 0
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற சர்வதேச கண்காட்சி, சென்னையில் வரும் 27-ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற சர்வதேச கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வரும் 27 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்பதுடன், 375-க்கும் மேற்பட்ட...
தமிழக அரசுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்தாண்டு முடிவடைந்த நிலையில், பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. விதிகள்படி புதிய ஆளுநர் பதவியேற்கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இந்நிலையில், நேற்று ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் ஆளுநரின் செயலர், பாதுகாப்பு அலுவலர்கள் சென்றுள்ளனர். தமிழக...
அம்பேத்கரை அவதூறு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக செயற்குழுக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற உழைப்பது, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்,...
தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் சென்னையில் மதரசனா திருவிழா – இசை நிகழ்ச்சி: டிச. 26-ம் தேதி வரை நடக்கிறது
admin - 0
தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் வகையில், மதரசனா திருவிழா - இசை நிகழ்ச்சி சென்னையில் வரும் டிச.26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்கழி மாதத்தையொட்டி மதரசனா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கர்நாடக இசைக் கலைஞர்களின் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நடப்பாண்டில் ‘மதரசனா திருவிழா 2024’ சென்னை தரமணியில் உள்ள ஆசிய ஊடகவியல் கல்லூரியின் எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கில் நேற்று தொடங்கியது. தனித்துவமான ஒலி இசை...
பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
admin - 0
பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
எமரால்டு பதிப்பகம் சார்பில் ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பெ.கண்ணப்பன் எழுதிய ‘புலன் விசாரணை - ஒரு கலை’, ‘சீர்திருத்தவா? சிறுமைப்படுத்தவா?’, மற்றும் தினத்தந்தி ‘4-ம் பக்கம்’ சு.நாராயணன் எழுதிய ‘தடம் பதித்த ஆளுமைகள்’ புத்தகங்கள் வெளியீட்டு விழா...










