Google search engine
சென்னையில் முதல்முறையாக மாற்றுத் திறனாளி வீரர்களுக்காக விளையாட்டு விடுதி அமைக்கப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 62 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.1.11 கோடி மதிப்பிலான உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா, நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்குத் தலைமை தாங்கிய துணை முதல்வர்...
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக, தேவைப்பட்டால் மத்திய அரசு முழு விளக்கம் கேட்கும் என்று பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறினார். ஒட்டன்சத்திரத்தில் பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட அலுவலகத்தை மாநிலப் பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களின் கோபத்தை, தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து சரிசெய்து விடலாம் என்ற திமுகவின் அணுகுமுறை 2026...
மகாவீர் ஜெயந்தி வரும் 10-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகளின்கீழ் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப் பார்கள், ஓட்டல் பார்கள், மதுபான விற்பனையகங்கள், மதுபானக் கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்றால் கடுமையான...
அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கே.என்.நேருவின் சகோதரர்களில் ஒருவரான கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அதிகாரிகள், தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன், ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' (டிவிஹெச்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கோவை, சென்னை உள்ளிட்ட...
நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதாக சட்டப்பேரவையில் கடந்த 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழக...
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல சுழற்சி போன்றவை காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு...
சேவைக் குறைபாடுகள், நேர்மையற்ற வணிக நடவடிக்கைகள், தவறான விளம்பரத்தால் பாதிக்கப்படுவோர் அவரவர் இருப்பிடத்தில் இருந்தோ அல்லது வணிகம் செய்யும் இடத்தில் இருந்தோ துரிதமாக புகார் செய்ய வசதியாக நுகர்வோர் குறைதீர் வலைதளம் மற்றும் செல்போன் செயலி உருவாக்கப்படும் என்று பேரவையில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி முக்கிய அறிவிப்புகளை...
மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் செய்வதற்கான வசதி கிடைக்க, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் விதமாக பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக பேட்டரியில் ஓடும் வாகனங்கள், சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்கு ஏற்ப பலரும் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். மின்சார...
தமிழக அரசின் 10 மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் வழங்​காமல் அவற்றை ஆளுநர் குடியரசுத் தலை​வருக்கு பரிந்​துரை செய்​தது சட்​ட​விரோதம் என்று உச்ச நீதி​மன்​றம் முக்​கிய தீர்ப்பை அளித்​துள்​ளது. இந்த தீர்ப்பு குறித்து மூத்த வழக்​கறிஞர்​கள் தெரி​வித்த கருத்து: மூத்த வழக்​கறிஞர் கே.எம்​.​விஜயன்: இதில் புதிய விஷ​யம் ஒன்​றும் இல்​லை. அரசி​யலமைப்​பு சட்​டம் என்ன சொல்​கிறதோ அதைத்​தான் உச்ச நீதி​மன்​ற​மும் தனது தீர்ப்​பில் கூறி​யுள்​ளது. ஆனால், இந்த தீர்ப்பு தமிழக ஆளுநர் மட்​டுமின்றி...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர்...