Google search engine
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் விற்பனை பிரசாதத்தில் உயிரிழந்த குட்டி பாம்பு இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் உள்ள மலை மீது மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வளாகத்தில் பிரசாதம் விற்பனை கடை உள்ளது. இங்கு புளியோதரை, தயிர்சாதம் உள்ளிட்ட பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக...
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு, கோவை சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி, காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் நேற்று ஆஜரானார். அவரிடம் எஸ்.பி. மற்றும் கூடுதல் எஸ்.பி. தலைமையிலான போலீஸார் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை...
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 5,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வரும் 11, 12, ம் தேதிகளில் வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் 5,932 சிறப்பு...
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் எதிரொலி காரணமாக குடிநீர் கேன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள முறையான விதிமுறைகளை பின்பற்றுமாறு குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி...
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். அகவை 93-ஐ எட்டினாலும் இன்னமும் தமிழர் நலனுக்காக சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருப்பவர். நிகழ்ச்சி ஒன்றுக்காக திருப்பூர் வந்திருந்த அவரிடம், இலங்கையை சீனா ஆக்கிரமித்து வரும் பிரச்சினை, எல்லையில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள், உலகத் தமிழர்களின் இன்றைய நிலை உள்ளிட்டவை குறித்து பேசினோம். இன்றைய சூழலில் எத்தனை நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்? இலங்​கை, பர்​மா, மலேசி​யா, சிங்​கப்​பூர், மொரிஷியஸ், தென்​னாப்​பிரிக்கா உள்​ளிட்ட நாடு​களில் தமி​ழர்​கள் அதி​க​மாக...
சி்ங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சி வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஜீராங் - வெஸ்ட் தொகுதியில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் வெற்றி பெற்றுள்ளார். இவர், தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூர்வீகமாக கொண்டவர். எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரான...
‘சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி - பாக்கியம் ஆகியோர், பணம், நகைக்காக, கடந்த 29-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில்...
வணி​கர்​கள் நலனை பாது​காக்க அதி​முக உறு​துணை​யாக இருக்​கும் என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். தமிழ்​நாடு அனைத்து வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்​பின் சார்​பில் 42வது வணி​கர் தினம் மற்​றும் 7-வது மாநில மாநாடு மறைமலைநகர் பகு​தி​யில் நடை​பெற்​றது. இதில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சிறப்பு அழைப்​பாள​ராக பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வணி​கர்​கள் நலனில் அதிக அக்​கறை கொண்​ட​வர்​கள். சில்​லரை வணி​கத்​தில் அந்​நிய முதலீடு...
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் வரும் 20-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக, பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒரு மணிநேரம் தாமதமாக பணிக்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளால் பாதுகாப்பு துறை ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 223 ஆண்டுகள் பழமையான...
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்துக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்துவற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை மருத்துவ சிகிச்சைகளுக்காக டிஸ்பென்சரி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏற்கெனவே இரண்டு பொது மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், ஊழியர்கள், மனுதாரர்கள், அதில் தொடர்புடையோர் என நீதிமன்றம் சார்ந்த அனைவருக்கும் ஏதேனும் அடிப்படை சிகிச்சை தேவைப்பட்டால் அங்கு...