திருப்பதியில் இருந்து திருமலைக்கு மாமிசம், மதுபானம், சிகரெட், போதைப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் திருப்பதி அலிபிரி பாதாலு மண்டபம் அருகே, தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான ராமசாமி, சரசம்மாள் ஆகியோர் துப்புரவு தொழிலாளர்களுடன் அமர்ந்து மாமிச உணவை சாப்பிட்டுள்ளனர். இதனை அப்பக்கம் நடந்து செல்லும் பக்தர் கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களை கண்டித்தனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டதால், அதனை வீடியோ எடுத்து...
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நாள்பட்ட நோய்களால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும்: மருத்துவ நிபுணர்கள் கருத்து
admin - 0
உலகளவில் ஏற்படும் மரணங்களில் நான்கில் 3 பங்கு நாள்பட்ட நோய்களால் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலானவற்றை வாழ்க்கை முறை மாற்றம், குறித்த நேரத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை, தடுப்பூசிகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து உலகின் முன்னணி மருத்துவ நிறுவனமான ஜிஎஸ்கே.வின் மருத்துவ இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கூறுகையில், ‘‘வயது வந்தவர்களுக்கு இன்பூளுயன்சா, சுவாச நோய் தொற்று (ஆர்எஸ்வி), அக்கி, அம்மை,...
உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்ளது.
தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளது. என்றாலும் இந்த நாடுகளிடையே பொதுவான விஷயமாக அரிசி உள்ளது. ஒவ்வொரு நாடும் தனித்துவமான அரிசி வகைகளை உற்பத்தி செய்கின்றன. இவை பெரும்பாலும் எல்லோராலும் வாங்கக் கூடிய விலையிலேயே கிடைக்கின்றன. என்றாலும் ஜப்பானின் கின்மேமை...
சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தனியார் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தரம்ஜாய்கர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள புரங்கா கிராமம் அருகே அதானி நிறுவனம் நிலக்கரி சுரங்கம் அமைக்கவுள்ளது. இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களிடம்...
டெல்லியில் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம் கொண்டு வந்த டாக்டர்கள்
admin - 0
டெல்லியில் உறுப்புகளை தானம் செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலில் மீண்டும் ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் கீதா சாவ்லா (55). நரம்பியல் கோளாறு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். கடந்த 5-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து துவாரகாவின் எச்சிஎம்சிடி மணிப்பால் மருத்துவமனையில் கீதாவை சேர்த்தனர். அங்கு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர்...
பிஹார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 60 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். ஆனால், பாஜக போட்டியிடும் 101 தொகுதிகளில், 49 வேட்பாளர்கள் முற்பட்ட வகுப்பினர்.
இதை ஈடுசெய்ய தே.ஜ. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்களை அதிகம் நிறுத்தியுள்ளது. இக்கட்சியில் 22 வேட்பாளர்கள் மட்டுமே முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இங்கு காங்கிரஸ் கட்சியில் 33, ஆர்ஜேடியில் 16...
உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அங்கு ரூ.8,260 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் வெள்ளி விழாவை முன்னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.7,210 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவற்றில் குடிநீர் , நீர்ப்பாசனம், தொழில்நுட்பக் கல்வி, எரிசக்தி, நகர்ப்புற...
மத்திய பிரதேசத்தின் பச்மரி நகரில் காங்கிரஸ் நிர்வாகிகளின் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். முன்னதாக பச்மரி சரணாலயத்தை அவர் பார்வையிட்டார். திறந்த ஜீப்பில் சரணாலயம் முழுவதும் சபாரி சென்றார்.
இதுகுறித்து பச்மரி சரணாலய துணை இயக்குநர் சஞ்சீவ் சர்மா கூறும்போது, “ராகுல் காந்தி பட்டாம்பூச்சி பூங்காவில் சிறிது நேரம் தங்கியிருந்தார். ஜீப்பில் சென்றபோது சில வகை மான்களை அவர்...
ம.பி.யில் போலீஸ் பயிற்சி காவலர்களுக்கு, ராம்சரிதமானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடுதல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்தரவிட்டுள்ளார்.
ம.பி.யில் போலீஸ் காவலர் பணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 4,000 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கடந்த ஜூலை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ம.பி.யின் 8 பயிற்சிக் கல்லூரிகளில் 9 மாதங்களுக்கான இந்தப் பயிற்சியை கூடுதல் டிஜிபி (பயிற்சி) ராஜா பாபு சிங் கடந்த ஜூலையில் தொடங்கி வைத்தார்.
அப்போது...
கர்நாடகாவில் கரும்புக்கு வழங்கப்படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்தக்கோரி கடந்த 8 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே விவசாயிகளில் சிலர் அங்கிருந்த போலீஸாரின் மீதும், வாகனங்களின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார்...










