Google search engine
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கேரள சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பிரபலமான யூடியூபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, 2024 ஜனவரி முதல் 2025 மே வரையிலான காலத்தில், கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி, ஆலப்புழா, மூணாறு உள்ளிட்ட நகரங்களுக்கு ஜோதி மல்ஹோத்ரா சென்று வந்துள்ளார். இந்த பயணத்துக்கான அனைத்து செலவுகளையும்...
 டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்மிருதி இரானி. மேலும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியும் ஆற்றிவந்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 2014 முதல் 2024 வரை ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக இருந்தார். இந்நிலையில் 2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தோல்வி அடைந்ததையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்தார். இதன்படி, தற்போது `கியூன்கி...
இ​மாச்சல பிரதேச மாநிலத்​தில் கடந்த 2 வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. மேலும், கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 19 முறை மேகவெடிப்பு மழை அங்கு பதி​வாகி​யுள்​ளது. இந்​நிலை​யில் மண்டி மாவட்​டம் துனாக் கிராமத்​தி​லுள்ள இமாச்சல பிரதேச மாநில கூட்​டுறவு வங்​கிக் கிளை​யானது மழை நீரில் மூழ்​கி​யுள்​ளது. மேலும் சகதி, குப்பை ஆகியவை வங்​கிக் கிளை முழு​வதும் தேங்​கிக் கிடக்​கிறது. இதனால் கிளை​யில் டெபாசிட் செய்​யப்​பட்​டிருந்த கோடிக்​கணக்​கான மதிப்​புள்ள...
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளனர். பாஜக, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய திபெத்துக்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற அமைப்பு இந்த மாதம் நடைபெற்ற அதன் இரண்டாவது கூட்டத்தின்போது இதற்கான...
கடந்த நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதை எதிர்த்து பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும் முஸ்​லிம் அமைப்​பு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​திருந்​தன. விசா​ரணை​யின்​போது, புதிய வக்பு சட்​டத்​தில் முஸ்​லிம் அல்​லாதவர்​களை​யும் குழுக்​களில் சேர்ப்​பது உள்​ளிட்ட சில அம்​சங்​கள் மீது நீதிப​தி​கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்​து, மத்​திய அரசு தாமாகவே முன்​வந்து சர்ச்​சைக்​குரிய அம்​சங்​களை வழக்கு முடி​யும் வரை அமல்​படுத்​த​மாட்​டோம் என உத்​தர​வாதம் அளித்​திருந்​தது. இதனால்,...
பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சீன ராணுவ தொழில்​நுட்​பத்​தின் புகழ் பாடு​வதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாடிக்​கை​யாக வைத்​துள்​ளார். நாடாளு​மன்​றத்​துக்கு உள்​ளே​யும், வெளி​யே​யும் சீன ராணுவ தொழில்​நுட்​பம், ஆயுதங்​களுக்கு ஆதர​வாக அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வரு​கிறார். கடந்த 2021-ம் ஆண்டு மக்​களவை கூட்​டத்​தின்​போது, லடாக்​கில் சீனா​வின் மோதல் போக்கை ஆதரிக்​கும் வகையில் ராகுல் பேசி​னார். சீன மாடல்...
பிஹாரில் தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்​டுள்ள வாக்​காளர் பட்​டியல் திருத்த பணி​களுக்கு இடைக்​கால தடை​ வி​திக்க உச்ச நீதி​மன்​றம் நேற்று மறுத்​து​விட்​டது. அதே​நேரம், அவசர வழக்​காக விசா​ரிக்க நீதி​மன்​றம் ஒப்​புக்​கொண்​டது. தகு​தி​யான குடிமக்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் சேர்ப்​ப​தை​யும், தகு​தி​யற்ற வாக்​காளர்​களை நீக்​கு​வதை​யும் முக்​கிய நோக்​க​மாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணி​களை தேர்​தல் ஆணை​யம் தொடங்​கியது. அதன்​படி, பிஹாரில் 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக...
2027-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் 16-வது மக்​கள் தொகை கணக்​கெடுப்பை நடத்​து​வதற்​கான அறி​விப்பை மத்​திய அரசு கடந்த மாதம் 16-ம் தேதி வெளி​யிட்​டது. அந்த அறி​விப்​பில், லடாக் போன்ற பனிப்​பொழிவு நிறைந்த பகு​தி​களில் அக். 1, 2026 என்ற தேதியை அடிப்​படை​யாகக் கொண்​டும், நாட்​டின் பிற பகு​தி​களில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்​படை​யாகக் கொண்​டும் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பில், பொது​மக்​கள்...
பிஹார் மாநிலத்​தில் உள்ள கோட்​டக் மஹிந்​திரா வங்​கி​யின் ஒரு கிளை மேலா​ளர் சூதாட்​டம் மற்​றும் பந்தய செயலிக்கு அடிமை​யாகி உள்​ளார். இதையடுத்​து, கடந்த 2 ஆண்​டு​களாக பிஹார் அரசின் வங்​கிக் கணக்​கி​லிருந்து கோடிக்​கணக்​கான பணத்தை திருடி சூதாடி அல்​லது பந்​த​யம் கட்டி உள்​ளார். குறிப்​பாக, பிஹார் அரசின் மாவட்ட நிலம் கையகப்​படுத்​தல் அதி​காரிக்​கான காசோலைகளில் போலி கையெழுத்தை இட்​டும் காசோலை குளோனிங் மூல​மும் மொத்​தம் ரூ.31.93 கோடியை மோசடி...
புரி ஜெகந்​நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. கடந்த 1460-ம் ஆண்​டில் அப்​போதைய கலிங்க மன்​னர் கபிலேந்​திர தேவா, தக்​காணத்து போர்​களில் வெற்றி பெற்று தங்க நகைகள், வைரங்​களு​டன் ஒடிசா திரும்​பி​னார். இந்த தங்க நகைகள், வைரங்​களை புரி ஜெகந்​நாதர் கோயிலுக்கு அவர் காணிக்​கை​யாக வழங்​கி​னார். அப்​போது ​முதல் புரி ஜெகந்​நாதர் கோயி​லில் சுனா பேஷா என்ற சிறப்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது. ஆரம்ப காலத்​தில் சுமார் 138...