ஹைதராபாத்தில் கலப்பட கள் குடித்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹைதராபாத் கூகட்பல்லியில் நேற்று அதிகாலை கலப்பட கள் குடித்த 19 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தனர்.
இவர்களில் சிலர் தனியார் மருத்துவமனைக்கும், சிலர் செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் தொடர்ந்து...
உத்தர பிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழில் முதலீட்டு மாநாடு: ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும் அரசு
admin - 0
உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழிலுக்கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடைபெற உள்ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி.யில் பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க முதலீட்டு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதன்முறையாக மது உற்பத்தியை ஊக்குவிக்கும் முதலீட்டு மாநாடும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை லக்னோவின் இந்திரா காந்தி பிரதிஷ்டானில் மாநில கலால் துறை நடத்துகிறது....
சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் 2 பெண்கள் உள்ளிட்ட 12 நக்சலைட்கள், போலீஸ், சிஆர்பிஎப் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். இவர்களில் ரூ.28.50 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட 9 பேரும் அடங்குவர். அரசின் ‘உங்கள் வீடு, கிராமத்துக்கு திரும்பு' பிரச்சாரத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 1,005 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர்.
இந்த சாதனை அரசின் தொலைநோக்கு கொள்கைகள், பாதுகாப்புப் படைகளின் தொடர் நடவடிக்கை மற்றும் உள்ளூர் சமூகங்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மாவோயிஸ்ட்களின் வெற்று சித்தாந்தத்தால்...
இறக்குமதி-ஏற்றுமதி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகள் அமெரிக்காவில் தலைமறைவாக இருந்த பொருளாதார குற்றவாளி மோனிகா கபூர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கான அனுமதியை நியூயார்க் நகர நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அவரை சிபிஐ காவலில் எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘‘மோனிகா ஓவர்சீஸ்’’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மோனிகா கபூர். இவர் தனது இரண்டு சகோதரர்களான ராஜன் கன்னா மற்றும் ராஜீவ் கன்னாவுடன் சேர்ந்து நகை வணிகத்திற்கான வங்கி...
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 45 வயதுக்குட்பட்ட 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தனர். இதேபோல கதக் மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக கர்நாடக அரசு 10 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. மருத்துவ நிபுணர் குழு சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
அதனை பெற்றுக்கொண்ட பின்னர், தினேஷ் குண்டு ராவ் கூறியதாவது:...
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கேரள சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பிரபலமான யூடியூபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்படி, 2024 ஜனவரி முதல் 2025 மே வரையிலான காலத்தில், கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி, ஆலப்புழா, மூணாறு உள்ளிட்ட நகரங்களுக்கு ஜோதி மல்ஹோத்ரா சென்று வந்துள்ளார்.
இந்த பயணத்துக்கான அனைத்து செலவுகளையும்...
டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்மிருதி இரானி. மேலும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியும் ஆற்றிவந்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 2014 முதல் 2024 வரை ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக இருந்தார். இந்நிலையில் 2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தோல்வி அடைந்ததையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்தார்.
இதன்படி, தற்போது `கியூன்கி...
இமாச்சலில் மழைநீர், சகதி, குப்பையால் மூழ்கிய வங்கி கிளை: கோடிக்கணக்கான நகைகள், ரொக்கத்தின் நிலை என்ன?
admin - 0
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 19 முறை மேகவெடிப்பு மழை அங்கு பதிவாகியுள்ளது. இந்நிலையில் மண்டி மாவட்டம் துனாக் கிராமத்திலுள்ள இமாச்சல பிரதேச மாநில கூட்டுறவு வங்கிக் கிளையானது மழை நீரில் மூழ்கியுள்ளது. மேலும் சகதி, குப்பை ஆகியவை வங்கிக் கிளை முழுவதும் தேங்கிக் கிடக்கிறது.
இதனால் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள...
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாஜக, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய திபெத்துக்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற அமைப்பு இந்த மாதம் நடைபெற்ற அதன் இரண்டாவது கூட்டத்தின்போது இதற்கான...
மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு விதிகள் அறிவிப்பு: புதிய இணையத்தில் வக்பு சொத்துகள் பதிவு செய்வது கட்டாயம்
admin - 0
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. விசாரணையின்போது, புதிய வக்பு சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் குழுக்களில் சேர்ப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் மீது நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மத்திய அரசு தாமாகவே முன்வந்து சர்ச்சைக்குரிய அம்சங்களை வழக்கு முடியும் வரை அமல்படுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்திருந்தது. இதனால்,...










